அரசு அதிகாரிகளின் செயற்குழு கூட்டத்தில் ஓடிய ஆபாச படம்....

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் ஆபாச படம் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Jun 8, 2019, 03:35 PM IST
அரசு அதிகாரிகளின் செயற்குழு கூட்டத்தில் ஓடிய ஆபாச படம்.... title=

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் ஆபாச படம் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

உணவு மற்றும் சிவில் சப்ளே துறை சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுக்கான கூட்டம் கடந்த நான்காம தேதி நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 33 மாவட்டத்தில் உள்ள சிவில் சப்ளே துறை அதிகாரிகள், 10 NIC துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மாநில செயலகத்தில் உள்ள NIC அறையில் நடைபெற்றது. மாநிலத்தின் உணவு மற்றும் சிவில் வழங்கல் திணைக்களத்தில் செயலாளர் மூத்த அதிகாரியான முகுத சின்ஹா தலைமை தாங்கினார். 

இந்த கூட்டத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த புரோஜக்ட்டரில் திடீர் என ஆபாச படம் ஒட துவங்கியது. இதை பார்த்ததும் அங்கிருந்த அத்தனை பேருக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு விட்டு. பலர் முகம் சுழிக்க துவங்கிவிட்டனர். அதிர்ச்சியில் அதிகாரிகள் வெளியேற ஆரம்பித்தார்கள். சம்பவம் நிகழ்ந்தபின், முகுத உடனடியாக இந்த விவகாரத்தில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து, முக்தா PTI-யிடம் கூறுகையில்; "வீடியோ மாநாட்டின் நடுவில், ஒரு ஆபாசமான கிளிப் திரையில் ஓட தொடங்கியது. நான் உடனடியாக NIC இயக்குனரை அழைத்து, இந்த விஷயத்தை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். ராஜஸ்தானின் 33 மாவட்டங்களில் இருந்து துறை அதிகாரிகள் மற்றும் NIC பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட சப்ளையர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் ஆபாசபடம் ஓடியது இணையதளத்தில் விரலாக பரவியது. 

 

Trending News