New Wage Code: சம்பளம் உயரும் ஆனால் உயராது, ஊதிய அமைப்பில் பெரிய மாற்றம்

சம்பளம் அதிகரிப்பதால், ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும், அதாவது டேக் ஹோம் சம்பளமும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அப்படி அல்ல. ஊழியர்களுக்கு இதில் ஏமாற்றமே இருக்கப்போகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2021, 06:32 PM IST
New Wage Code: சம்பளம் உயரும் ஆனால் உயராது, ஊதிய அமைப்பில் பெரிய மாற்றம் title=

New Wage Code: மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளன. இருப்பினும் பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை இருந்தபோதிலும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளன.

சம்பளம் அதிகரிப்பதால், ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும், அதாவது டேக் ஹோம் சம்பளமும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அப்படி அல்ல. ஊழியர்களுக்கு இதில் ஏமாற்றமே இருக்கப்போகின்றது. 

புதிய ஊதியக் குறியீடு (New Wage Code) அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் டேக் ஹோம் குறைவது மட்டுமல்லாமல், வரிச்சுமையும் அதிகரிக்கக்கூடும்.

கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம்

நிறுவனம் ஊழியருக்கு அளிக்கும் மொத்தத் தொகை, அதாவது ஒரு ஊழியரின் Cost-to-company (CTC)-யில் மூன்று முதல் நான்கு கூறுகள் உள்ளன. அடிப்படை சம்பளம்  (Basic Salary), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பி.எஃப் போன்ற ஓய்வூதிய சலுகைகள், கிராச்சுட்டி மற்றும் ஓய்வூதியம் மற்றும் எல்.டி.ஏ போன்ற வரி சேமிப்பு கொடுப்பனவுகள் மற்றும் பொழுதுபோக்கு கொடுப்பனவுகள் இதில் அடங்கும்.

இப்போது புதிய ஊதியக் குறியீட்டின் படி, கொடுப்பனவுகள் மொத்த சம்பளத்தில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 

- ஒரு ஊழியரின் சம்பளம் மாதத்திற்கு ரூ .50,000 என்றால், அவரது அடிப்படை சம்பளம் ரூ .25,000 ஆகவும், அவரது கொடுப்பனவுகள் மீதமுள்ள ரூ .25,000 ஆகவும் இருக்க வேண்டும். 

- அதாவது, இது வரை அடிப்படை சம்பளத்தை 25-30 சதவீதமாக வைத்து, மீதமுள்ள பகுதியில் மற்ற கொடுப்பனவுகளை வைத்திருந்த நிறுவனங்கள், இனி அடிப்படை சம்பளத்தை 50 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க முடியாது. 

- இத்தகைய சூழ்நிலையில், புதிய ஊதியக் குறியீட்டின் விதிகளைச் செயல்படுத்த நிறுவனங்கள் (Private Companies) பல கொடுப்பனவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும்.

புதிய ஊதியக் குறியீட்டின் கீழ் ஓய்வு பெற்றபின் கிடைக்கும் தொகை அதிகரிக்கும் 

- சில கூறுகளான வருங்கால வைப்பு நிதி (Provident Fund) மற்றும் கிராச்சுட்டி ஆகியவை ஊழியரின் அடிப்படை சம்பளத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. 

- அடிப்படை சம்பள உயர்வுடன், இந்த இரண்டு கூறுகளின் பங்களிப்பும் அதிகரிக்கும். 

- அதாவது, ஊழியரின் ஓய்வூதிய நிதி அதிகரிக்கும், ஆனால் அவரது டேக் ஹோம் சம்பளம் குறையும். 

- புதிய ஊதியக் குறியீட்டின் கீழ், ஒரு பெரிய பகுதி பி.எஃப் மற்றும் கிராச்சுட்டிக்கு செல்லத் தொடங்கும்.

ALSO READ: New Wage Code: இனி வாரத்தில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே..!!!

புதிய ஊதியக் குறியீட்டால் ஏற்படும் மாற்றத்தை ஒரு எடுத்துக்காட்டு மூலம் புரிந்துகொள்வோம்:

- ஒரு ஊழியரின் சம்பளம் ரூ .1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். 

- அவரது அடிப்படை சம்பளம் ரூ .30,000. 

- ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் பி.எஃப்-க்கு அளிக்கும் பங்களிப்பு- 12 % 

- அதாவது, இருவரும் ரூ .3600 பங்களிக்கின்றனர். ஆகையால் ஊழியரின் டேக் ஹோம் சம்பளம் மாதம் ரூ .92800 ஆக இருக்கும். 

- அடிப்படை சம்பளம் ரூ .50,000 ஆக அதிகரிக்கும் போது, ​​கையில் வரும் சம்பளம் ரூ .88000 ஆக இருக்கும். - அதாவது மொத்தம் ரூ .4800 ஒவ்வொரு மாதமும் குறைக்கப்படும். இதேபோல், கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும்.

வரிச்சுமை அதிகரிக்குமா?  

புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பின்னர், ஊழியர்களின் சம்பள அமைப்பு மாறும். இதன் காரணமாக ஊழியர்களின் வரிச்சுமை அதிகரிக்கும். ஆனால், அனைத்து ஊழியர்களின் வரிச்சுமையிலும் ஒரே மாதிரியான தாக்கம் இருக்காது. 

சம்பளம் அதிகமாக இருக்கும் ஊழியர்களின் வரிச்சுமை அதிகரிக்கும். அவர்களின் கொடுப்பனவுகள் அனைத்தும் சி.டி.சி.யின் 50 சதவீதத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்பதால், அதிக தாக்கம் இருக்கும். அதேசமயம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு குறைந்த வரி பாதிப்பு இருக்கும். அவர்களது பி.எஃப் பங்களிப்பு அதிகரிக்கும். 1.5 லட்சம் வரையிலான பங்களிப்புக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். ஆகையால் அவர்களது வரிச்சுமையையும் குறைவாக இருக்கும். 

ALSO READ: New Wage Code அமலாக்கத்திற்குப் பிறகு உங்கள் ஊதியத்தில் வரப்போகும் மாற்றம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News