டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை செய்யுங்கள்... ஏன் ரொம்ப அவசியம்?

Odisha Train Accident Insurance: ஒடிசாவில் விபத்தான ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில் வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே விபத்து காப்பீட்டு தொகையை தேர்வு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2023, 06:41 AM IST
  • இரண்டு பயணிகள் ரயிலையும் சேர்த்து 680 பேர் காப்பீட்டை தேர்வு செய்துள்ளனர்.
  • இதுவரை 366 பேர் மட்டுமே காப்பீட்டுத் தொகைக்கு உரிமை கோரியுள்ளனர்.
  • இந்த காப்பீட்டின் பிரீமியமாக 35 பைசாவை ரயில்வே பயணிகளிடம் இருந்து வசூலிக்கிறது.
டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை செய்யுங்கள்... ஏன் ரொம்ப அவசியம்? title=

Odisha Train Accident Insurance: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடந்த பயங்கர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது எனலாம். பாலசோரில் உள்ள பஹ்நாகா ரயில் நிலையத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் சுமார் 294 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

ரயில்வே, மத்திய அரசு, ஒடிசா மாநில அரசு மற்றும் மேற்கு வங்க அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவை காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு அந்தந்த மட்டத்தில் இழப்பீடு அறிவித்தன. இதுபோன்ற அவசரநிலை ஏற்பட்டால், பயணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை ரயில்வே காப்பீடு வழங்குகிறது, அதற்கு ரயில்வே 35 பைசாவை மட்டுமே வசூலிக்கிறது. ஆனால் பாலசோர் ரயில் விபத்தில் பலியான பயணிகளில் 30 சதவீதம் பேர் மட்டுமே இந்த காப்பீட்டுத் தேர்வைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

IRCTC-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதன் செயலியில் இருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, உங்கள் பயணத்தில் காப்பீடு செய்யும் விருப்பத்தைப் பெறுவீர்கள். இதில் 35 பைசா பிரீமியத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு எடுக்கலாம். அதன் பிறகு ஏதேனும் ரயில் விபத்தில் காயம் அல்லது இறப்பு ஏற்பட்டால் காப்பீடு கோரலாம். இருப்பினும், இந்தக் காப்பீட்டுக் கோரிக்கையை எடுப்பது கட்டாயமில்லை.

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டில் புதிய விதி... கோடிக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும்!

30 சதவீதம் பேர்

பாலசோர் ரயில் விபத்தில், முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பயணக் காப்பீட்டைத் தேர்வு செய்தனர். பாலசோர் ரயில் விபத்தில் மொத்தம் 2,296 பேர் முன்பதிவு டிக்கெட் எடுத்துள்ளனர். அதில் 680 பேர் தங்கள் டிக்கெட்டுகளில் காப்பீட்டை தேர்வு செய்துள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸில் 346 பயணிகளும், ஹவுரா எக்ஸ்பிரஸில் 334 பயணிகளும் அந்த 35 பைசா பயணக் காப்பீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

366 கோரிக்கைகள்

காப்பீட்டை தேர்ந்தெடுப்பது ஒருபுறம் இருந்தாலும், ரயில் விபத்துக்குப் பிறகு பெறப்பட்ட காப்பீடு க்ளெய்ம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகும் மிகக் குறைவான கோரிக்கைகளே காப்பீட்டை கேட்டு வந்துள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது. எஸ்பிஐ ஜெனரல் காப்பீட்டில் 351 பேரும்  மற்றும் எஸ்பிஐ காப்பீட்டில் 15 பேரும் இந்த உரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

எவ்வளவு இழப்பீடு?

ரயில்வே பயணக் காப்பீட்டு வசதியின் கீழ், ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ, 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். பயணிகளுக்கு பகுதியளவு ஊனம் ஏற்பட்டால், அவருக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சம் வழங்கப்படுகிறது. அதேசமயம், பலத்த காயம் ஏற்பட்டால், 2 லட்ச ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டால், 10,000 ரூபாயும், ரயில்வேயில் இருந்து வழங்கப்படும்.

எப்படி உரிமை கோருவது?

ரயில் விபத்து நடந்த 4 மாதங்களுக்குள் காப்பீட்டுத் தொகையை பெறலாம். IRCTC வழங்கும் இந்த வசதிக்காக, நீங்கள் காப்பீடு வாங்கியிருக்கும் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையை உரிமை கோரலை தாக்கல் செய்யலாம். காப்பீடு வாங்கும் போது, நாமினியின் பெயரை நிரப்பவும், அதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை க்ளைம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. நாமினி இல்லாவிட்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஜன்னல், கதவுகள் இல்லாத ரயில் பெட்டி... NMG பெட்டிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News