சகல செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை..!

'பொருளில் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லாதவருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த  செல்வம் மிகவும் அவசியம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 19, 2022, 07:18 PM IST
  • வீட்டில் பணப் பற்றாக்குறை என்பதே இருக்காது.
  • குபேரன் செல்வத்தின் கடவுள்.
  • அன்னை லட்சுமியுடன் குபேரரை வழிபடுவது நன்மை தரும்.
சகல செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி குபேர பூஜை..! title=

'பொருளில் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லாதவருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த  செல்வம் மிகவும் அவசியம். செல்வத்தின் கடவுள் குபேரன். இ

செல்வம் செழிப்புடன் இருக்க பொதுவாக மக்கள் அன்னை லட்சுமி தேவியை வழிபடும் பழக்கம் உள்ளது. ஆனால் தேவி மகாலட்சுமியின் வழிபாட்டுடன் கூடவே குபேரரையும் வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும். மகாலக்ஷ்மி வணங்கினால் மட்டும் போதாது, செல்வத்தின் கடவுளான குபேரரையும் மகிழ்விக்க வேண்டும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. செல்வத்தின் கடவுளான குபேரை எப்படி மகிழ்விப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.

வடகிழக்கு திசையில் குபேர ஸ்தாபனம் செய்து அவரை வழிபட வேண்டும். அதாவது,  வீட்டின் வடகிழக்கு திசையை சுத்தம் செய்து கங்காஜலத்தால் சுத்திகரிக்கவும். அதன் பிறகு, தீபம், ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இதற்குப் பிறகு, குபேர் பகவானை நினைத்து, பூஜை செய்தால், உங்கள் மன ஆசைகள் நிறைவேறும்.

குபேர மந்திரம் ஜபித்தல்

தினமும் காலையில் குளித்த பின், 'ஓம் ஸ்ரீம், ஓம் ஹ்ரீம் ஶ்ரீம், ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வித்தேஎஷ்வராய: நமஹ' ( 'ॐ श्रीं, ॐ ह्रीं श्रीं, ॐ ह्रीं श्रीं क्लीं वित्तेश्वराय: नमः' ) என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இந்த மந்திரத்தை காலை மற்றும் மாலை இரு வேளையும் உச்சரிப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

ALSO READ | Money Tips: பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க சில டிபஸ்..!!

குபேர யந்திர வழிபாடு

குபேர் யந்திரத்தை வழிபடுவதும் குபேர பகவானை மகிழ்விக்கும். குபேர் யந்திரத்தை தங்கம், வெள்ளி அல்லது பஞ்சலோகம் ஆகிய மூன்று உலோகங்களில் ஏதேனும் ஒன்றில் வாங்கி வரவும். அதன் பிறகு தினமும் இந்த யந்திரத்தை வழிபடவும். இப்படி செய்வதால் வீட்டில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில், துரதிர்ஷ்டங்களும் நீங்கும்.

திரயோதசி அன்று குபேர வழிபாடு

செல்வத்தின் கடவுளான குபேர் பூஜையை தினமும் செய்யலாம். அப்படி முடியவில்லை என்றால், சில குறிப்பிட்ட தேதியிலும் வழிபாடு செய்வதும் பலனைத் தரும்.  அமாவாசையின் 13வது நாளான திரயோதசி நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையாக பூஜை செய்ய வேண்டும். வழிபடும் இடத்தை சுத்தம் செய்து, குபேர் யந்திரத்தை வைக்கவும். பின்னர் இந்த யந்திரத்தில் அட்சதையால் அர்ச்சனை செய்யவும். இதற்குப் பிறகு  சங்கல்பம் செய்து கொண்டு குபேரனை வணங்கி, குபேர மந்திரத்தை உச்சரிக்கவும். குபேர மந்திரத்தை ஜெபமாலையை கையில் வைத்துக் கொண்டு உச்சரிக்கவும். இதைச் செய்வதன் மூலம், செல்வத்தின் கடவுளான குபேர் மகிழ்ச்சி அடைகிறார் உங்களது பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்றன.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | அடுத்த பிறவியில் நாம் மனிதனா, மிருகமா.. தீர்மானிப்பது எது..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News