உயர்ந்த மனிதனாய் தமிழ் சினிமாவில் களமிறங்கும் அமிதாப்பச்சன்

உயர்ந்த மனிதன் அமிதாப்பச்சனுடன் தமிழ் திரையுலகில் இணையும் எஸ்.ஜே சூர்யா....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2018, 12:42 PM IST
உயர்ந்த மனிதனாய் தமிழ் சினிமாவில் களமிறங்கும் அமிதாப்பச்சன் title=

உயர்ந்த மனிதன் அமிதாப்பச்சனுடன் தமிழ் திரையுலகில் இணையும் எஸ்.ஜே சூர்யா....! 

தமிழில் சில வருடங்கள் முன்பு கள்வனின் காதலி என்ற படத்தை இயக்குனர் தமிழ் வாணன் எஸ்.ஜே சூர்யாவை வைத்து இயக்கினார். நீண்ட இடைவேளைக்கு இவர் மீண்டும் பிறகு இயக்கும் திரைப்படம் இயக்க உள்ளார். 

'உயர்ந்த மனிதன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பைவ் எலமென்ட் புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கள்வனின் காதலி படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ்வாணன் படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டிலை சென்னையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அதில் தமிழில் அறிமுகமாகும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் மூலம் முதன்முறையாக இந்தியில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா படம் குறித்துப் பேசுகையில், ``அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவ்வளவு பிசியாக இருக்கின்ற மனிதனின் கால்ஷீட் கிடைக்க மிகவும் சவாலாக இருந்தது. இப்படி இருக்க `உயர்ந்த மனிதன்' படத்துக்கு அவர் கொடுத்த கால்சீட் 40 நாள்கள்’’ என்று எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

 

Trending News