Video: நாகினி நாயகிக்கு பதிலாக இரண்டு புது நாயகிகள்!

நாகினி 3-ஆம் பாகத்தில் களமிறங்கும் இரண்டு புதுநாயகிகளின் வீடியா வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 20, 2018, 07:48 AM IST
Video: நாகினி நாயகிக்கு பதிலாக இரண்டு புது நாயகிகள்! title=

நாகினி 3-ஆம் பாகத்தில் களமிறங்கும் இரண்டு புதுநாயகிகளின் வீடியா வெளியாகியுள்ளது!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்தது நாகினி தொடர். 

இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் மற்றம் ஆதா கான் நாடுமுழுவதிலும் இருக்கும் இளைஞர்களை காட்டிலும் தமிழக இளைஞர்களிடையே பெரும் ரசிகர் பட்டாளத்தினை பெற்றனர். தமிழில் ஒரு பாகம் மட்டுமே வெளியான இத்தொடரின் மூலம் பிரபலமான இவர்கள் இந்தி தொடர்களில் 2 பாகங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த நாகினி தொடரின் இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் அடுத்த பாகத்தினை இத்தொடரின் குழுவினர் துவங்கியுள்ளனர். ஆனால் முந்தைய நாயகிகளுக்கு பதிலாக அனிதா மற்றும் கரிஷ்மா என்னும் இரு நாயகிகள் களமிறக்கப்பட்டுள்ளது.

நாகினி ரசிகர்கள் தங்களுக்கு மௌனி ராய், ஆதா கான் தான் வேண்டும் என ட்விட்டரிலும், பேஸ் புக்கிலும் வலியுறுத்தி வந்த போதிலும், இந்த புது நாயகிகளை வைத்து படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பின் காட்சிகளை நாகினி நாயகிகள் இருவரும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

Trending News