அனாதை என்று அவமானப்படுத்தப்படும் சக்தி எடுக்கும் விபரீத முடிவு! சீரியலில் கிளைமேக்ஸா?

Thavamai Thavamirundhu Update: காணாமல் போகும் ஷக்தி.. மார்க்கிற்கு தெரிய வரும் உண்மைகள் - அதிரடி திருப்பங்களுடன் தவமாய் தவமிருந்து சீரியல் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2023, 12:29 PM IST
  • காணாமல் போகும் ஷக்தி...
  • மார்க்கிற்கு தெரிய வரும் உண்மைகள்...
  • அதிரடி திருப்பங்களுடன் இன்றைய சீரியல்
அனாதை என்று அவமானப்படுத்தப்படும் சக்தி எடுக்கும் விபரீத முடிவு! சீரியலில் கிளைமேக்ஸா? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘தவமாய் தவமிருந்து’ சீரியல்.

தவமாய் தவமிருந்து : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தவமாய் தவமிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல திருப்பங்களுடன்,  முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கும்  இந்த சீரியலில் சக்தியை ராஜா, பாண்டி ஆகியோர் பிடித்து தள்ளி விட்டு அவனுக்கு தலையில் காயம் ஏற்பட மார்க் போலீசில் புகார் கொடுக்க வீட்டு பெண்கள் எல்லாரையும் கைது செய்து அழைத்து சென்றனர். 

இப்படியான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, ரவி, ராஜா, தங்கராசு, பாண்டி எல்லாரும் சேர்ந்து பெண்களை பெயிலில் வெளியே எடுக்க அவர்கள் மார்க்கிடம் வந்து எங்களையே ஜெயில்ல வச்சிடீங்க, மோதி பாத்துடலாம் என்று சவால் விடுகின்றனர். 

இதனை தொடர்ந்து எல்லாரும் சேர்ந்து சக்தியை அனாதை என்று அவமானப்படுத்த மார்க்கிடம் இதை சொல்லி வருத்தப்படும் இவன் நடு இரவில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற துக்கத்தில் இருந்து திடீரென எழுந்து கொள்ளும் மார்க் அதிர்ச்சி அடைகிறார். சக்தியை எல்லா இடமும் தேட அவன் கிடைக்காமல் போகிறான். 

மேலும் படிக்க | நியூ என்ட்ரி கொடுக்கும் மாயா.. பழனிக்கு காத்திருந்த அதிர்ச்சி

அடுத்ததாக ஒரு பெண் சக்தியை எல்லாரும் அநாதை என்று சொல்லி திட்டிய விஷயத்தை சொல்ல அவர் ராஜா வீட்டிற்கு சென்று சத்தம் போடுகிறார். அதனை தொடர்ந்து அனாதை ஆசிரமத்திற்கு சென்று பார்க்க சக்தி அங்கு இருக்கிறான், ப்ரியாவின் ட்ரைவர் ஷக்தி உங்களுடைய பேரன் என்ற உண்மைகளை உடைக்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, எனவே தவமாய் தவமிருந்து சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தவமாய் தவமிருந்து : சீரியலை எங்கு பார்ப்பது?

தவமாய் தவமிருந்து சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | இந்த 5 கொரியன் ஆக்சன் திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News