ரவுடிகளிடம் சிக்கும் மாரி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: ரவுடிகளிடம் சிக்கும் மாரி.. ஜாஸ்மின் போடும் திட்டம்! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : May 25, 2023, 12:03 PM IST
  • ரவுடிகளிடம் சிக்கும் மாரி.. ஜாஸ்மின் போடும் திட்டம்
  • பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல்
  • இன்றைய எபிசோட் அப்டேட்
ரவுடிகளிடம் சிக்கும் மாரி - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி‌.  இந்த சீரியலில் முத்து பேச்சி மீது சாமி இறங்கி ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும் என சொன்ன நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது முத்து பேச்சி கையில் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு நான்கு எல்லைகளில் உள்ள விளக்கை ஏற்ற போக மறு பக்கம் மாரியும் துர்காவும் முத்துப்பேச்சியை காப்பாற்ற கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை ரவுடிகள் பின் தொடர அவர்களிடம் சிக்கிக் கொள்ள துர்கா ரவுடியின் கையை கடித்து தப்பிக்கிறாள். மாரி கல்லை எடுத்து அடித்து அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி ஒளிகின்றனர். 

மேலும் படிக்க | Goundamani Birthday: ‘காமெடி கிங்’ கவுண்டமணி குறித்து நீங்கள் அறியாத பல தகவல்கள் இதோ..!

maari

அதற்கு அடுத்ததாக முத்துப்பேச்சி முதல் விளக்கை ஏற்றப் போக ரவுடிகள் அதை தடுக்க முயற்சி செய்ய சாமியாடிக்கொண்டே ஆக்ரோஷமாக அவர்களைத் தாக்கி விளக்கேற்ற கோவிலில் ஒரு விளக்கு எரிய தொடங்குகிறது. இதனால் ஜாஸ்மின் டீம் அதிர்ச்சி அடைகிறது. அதைத்தொடர்ந்து மாரி மீண்டும் ரவுடிகளுடன் சிக்க அங்கிருந்தும் ஒரு வழியாக தப்பிக்க முத்துப்பேச்சி இரண்டாவது விளக்கை ஏற்ற போக அப்போதும் ரவுடிகள் தடுக்க முயற்சி செய்ய மீண்டும் அவர்களை ஆக்ரோஷமாக தாக்கி விளக்கையேற்ற கோவிலில் இரண்டாவது விளக்கு எரிகிறது. 

இதன் காரணமாக ஜாஸ்மின் டீம் அதிர்ச்சியாக ரவுடிகளிடம் முத்துப்பேச்சியை எதுவும் செய்ய வேண்டாம் விளக்கை உடைத்து விடுங்கள் என்று சொல்ல சூர்யா இதை கேட்டு விடுகிறான். பிறகு சூர்யா முத்துப்பேச்சி அம்மா மேல சாமி இருக்கு அவங்கள எதுவும் பண்ண முடியாது இருந்தாலும் நாம ஏதாவது உதவி செய்ய முயற்சி செய்யலாம் என கிளம்பிச் செல்கிறான்.  முத்துப்பேச்சி மூன்றாவது விளக்கை ஏற்ற வர ரவுடிகள் அந்த விளக்கை உடைத்து விட சூர்யா என்ன செய்வது என யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News