கத்தி குத்து வாங்கிய மாரி நிலைமை என்ன? - மாரி சீரியல் அப்டேட்!

Mari Zee Tamil mega serial update: கத்தி குத்து வாங்கிய மாரி நிலைமை என்ன? முத்து பேச்சிக்கு இன்ப அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - RK Spark | Last Updated : May 29, 2023, 10:17 AM IST
  • கத்தியால் குத்து வாங்கிய மாரி.
  • அவசரமாக ஊருக்கு கிளம்பி செல்கின்றனர்.
  • மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கத்தி குத்து வாங்கிய மாரி நிலைமை என்ன? - மாரி சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  இந்த சீரியலில் முத்துப்பேச்சியை சர்க்கரையின் ஆட்கள் கொல்ல வந்த நிலையில் மாரி முத்துப்பேச்சியை காப்பாற்றி கத்தியால் குத்து வாங்கினாள். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. கத்தியால் குத்து வாங்கிய மாரி மயங்கி விழ இது சக்கரையின் ஏற்பாடாக தான் இருக்கும் என அனைவரும் அந்த ரவுடியை பிடித்து அடி கொடுத்து அவன் ஒரு ஆண் என்பதை அறிந்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்கின்றனர். 

மேலும் படிக்க | ‘இதெல்லாம் உண்மை கதையா?’ கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் காட்டம்..!

இந்த விஷயம் அறியும் ஜாஸ்மின் டீம் இனிமே இந்த ஊரில் இருந்தால் நமக்கு ஆபத்து, சக்கரை நமக்கும் இதில் தொடர்பு இருக்கு என்பதை சொல்லிவிட்டால் சூர்யாவுக்கு எல்லா விஷயமும் தெரிந்து விடும் என அவசரமாக ஊருக்கு கிளம்பி செல்கின்றனர்.  பிறகு மாரி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க டாக்டர் மாரிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என சொல்ல எல்லோரும் நிம்மதி அடைகின்றனர். அதற்கு அடுத்ததாக வீட்டுக்கு வரும் மாரி முத்துப்பேச்சியிடம் துர்கா ராசாத்தியின் மகள் தான் என்ற உண்மையை உடைக்கிறாள். 

mari

இதனால் சந்தோஷமடையும் முத்து பேச்சி ராசாத்தி மற்றும் அவளது கணவர் குறித்து கேட்க இருவரும் கார் ஆக்ஸிடெண்ட்டில் இறந்து விட்டதாக சமாளிக்கிறாள் மாரி. அதற்கு அடுத்ததாக முத்துப்பேச்சி பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று உன்னுடைய கோவிலை திறந்தது மட்டுமல்லாமல் என்னுடைய உயிரையும் காப்பாற்றி என் தங்கச்சி மகளையும் என்கிட்ட ஒப்படைத்து இருக்கா மாரி. இந்த மாதிரி ஒரு நல்ல உறவை கொடுத்ததற்கு நன்றி என வேண்டுகிறார். அதன் பிறகு நீயும் எனக்கு தங்கச்சி மாதிரி தான் என மாரி மற்றும் சூர்யாவுக்கு சீர் கொடுக்கிறார் முத்து பேச்சி. அதோடு அடுத்த வருஷம் திருவிழாவுக்கு நீங்க மூணு பேரா வரணும் என சொல்கிறார்.  மாரி புரியாமல் இருக்க முத்து பேச்சி அடுத்த வருஷம் நீ ஒரு குழந்தையை பெத்து எடுத்துக்கிட்டு அம்மாவா வரணும் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மாரி சீரியல் அப்டேட்: பூட்டியிருந்த கோயிலை திறந்த மாரி-பஞ்சாயத்தை கூட்டிய சர்க்கரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News