நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 100 மது பாட்டில்கள்... கைது செய்யப்பட்ட டிரைவர்

தென்னிந்திய நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் இருந்து சுமார் 100 மதுபான பாட்டில்களை தமிழக போலீசார் கைபற்றினார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 15, 2020, 11:55 AM IST
நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 100 மது பாட்டில்கள்... கைது செய்யப்பட்ட டிரைவர் title=

"பாகுபாலி" (Baahubali) படத்தின் முக்கிய கதாபாத்திரமான "சிவகாமி"யாக நடித்து விருது பெற்ற தென்னிந்திய நடிகை ரம்யா கிருஷ்ணனின் Ramya (Krishnan) காரில் இருந்து சுமார் 100 மதுபான பாட்டில்களை தமிழக போலீசார் கைபற்றினார்கள். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு கார் ஓட்டுனர் தான் காரணம்.

மேலும் செய்தி படிக்க | தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர் - East Coast Road) வியாழக்கிழமை அவர்கள் வாகன சோதனைகளை மேற்கொண்டிருந்த நேரத்தில். நடிகையின் காரில் சுமார் 100 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த போலீசார் நடிகை ரம்யா கிருஷ்ணனும் (Ramya Krishnan) இருந்துள்ளார். மதுபாட்டில்களை குறித்துக் அவரிடம் மதுபாட்டில்கள் பற்றி தனக்கு தெரியாது என்று கூறினார்.

மேலும் செய்தி படிக்க | மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது ‘பென்குயின்’ திரைப்படத்தின் ட்ரைலர்...

அதன் பின்னர் தமிழக போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபானம் எங்கு வாங்கப்பட்டது என போலீசார் விசாரணை செய்துள்ளனர். அப்பொழுது தமிழக அரசு நடத்தும் மதுபானக் கடையில் (Tasmac Shop) மதுபானம் வாங்கப்பட்டதாக டிரைவர் செல்வகுமார் கூறியுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பிறகு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து மற்றொரு டிரைவர் வந்து நடிகை ரம்யா கிருஷ்ணனை மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

மேலும் செய்தி படிக்க | Viral Pic: ரவிவர்மாவின் ஓவியங்களாய் மாறிய பிரபல நடிகைகள்..!

Trending News