கடந்த 2023-24ஆம் ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் 45 ஆயிரத்து 886 கோடி ரூபாய் வருவாயைத் தமிழக அரசு ஈட்டியுள்ளதாகக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்குடியில் டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதை காவல்துறையினர் கண்டும் காணாமல் செல்வதாக குற்றம்சாட்டிவரும் பொதுமக்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை என்பதால், மது கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மோடி நாட்டை உயர்த்த நினைக்கிறார் என்றும், ஆனால் திமுக புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
செங்கல்பட்டு மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்களம் ஆத்தனஞ்சேரி பகுதியில் 4096 எண் கொண்ட டாஸ்மார்க் கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்தக் கடையில் எல்லா மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அங்கு வரும் மதுப்பிரியர்கள் புலம்பியபடியே செல்வது வழக்கமாகி உள்ளதாக மதுபிரியர்கள் குற்றச்சாட்டு
பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் சாராய வியாபாரிகளின் கேள்விக்கு பயந்து டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே மக்களிடம் உரையாற்றிய அண்ணாமலை இவ்வாறு தெரிவித்தார்.
பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் சாராய வியாபாரிகளின் கேள்விக்கு பயந்து டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க முடியவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தட்டி கேட்ட பாஜக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
TASMAC Quarter-only Trick: பல்வேறு வகையான மதுபானங்களின் விலையை தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (TASMAC) உயர்த்தியது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வந்த விலை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு நூதன மோசடி நடைபெறுவது அம்பலமாகியுள்ளது...
பிப்ரவரி முதல் டாஸ்மார்க் மதுபான கடையில் 10 முதல் 20 ரூபாய் வரை மதுபானங்களின் விலையில் மாற்றம் வந்து உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மீது மதுபிரியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.