யமுனாவால் வந்த சிக்கல்... ஷக்தி எடுத்த சபதம் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 28, 2024, 06:22 PM IST
  • யமுனாவால் வந்த சிக்கல், கைதான ரங்கநாயகி..
  • ஷக்தி எடுத்த சபதத்தால் பரபரப்பாகும் சீரியல்
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்த என்ன?
யமுனாவால் வந்த சிக்கல்... ஷக்தி எடுத்த சபதம் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் title=

இந்த சீரியலில் ரங்கநாயகியும் சக்தியும் கூட்டு சார்ந்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சக்திதேவியுடன் கார்த்திக்கை சென்று சந்தித்து பிரியா உண்மையாக உன்னை காதலிக்க வந்தவன் கிடையாது ரங்கநாயகி ஏற்பாடு செய்த ஆள் என்ற உண்மைகளை உடைக்கின்றனர். இதை அறிந்து அதிர்ச்சியுடன் கார்த்திக் நேராக யமுனாவிடம் வந்து மன்னிப்பு கேட்டு உண்மைகள் அனைத்தையும் கூறுகிறான்.

மறுபக்கம் ரங்கநாயகி சக்திக்கும் வெற்றிக்கும் தெரியாமல் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்ய பிறகு இந்த விஷயம் அறிந்து ஷக்தி ஆனந்த கண்ணீர் விடுகிறாள். சக்தி கையில் பால் சொம்பை கொடுத்து அனுப்பும் போது வீட்டுக்கு வரும் போலீஸ் யமுனா கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக சொல்லி ரங்க நாயகி கைது செய்ய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்... டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்!

ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட ரங்க நாயகி யமுனா அவமானப்படுத்தி பேச புஷ்பா இது எல்லாத்துக்கும் காரணம் சக்திதான் என்று ரங்க நாயகியை ஏற்றிவிடுகிறாள். பிறகு ரங்க நாயகி வீட்டுக்கு வந்த அவள் சக்தி இந்த வீட்டை விட்டு வெளியே போற வரைக்கும் சாப்பிட மாட்டேன் என்று விபூதி அடித்து சத்தியம் செய்கிறாள்.

வெற்றி சக்தியின் வீட்டுக்கு வர சக்தி வீட்டை விட்டு வெளியே போனால் தான் சாப்பிடுவேன் என்று இரண்டு நாட்களாக அடம்பிடிக்க டாக்டர் இன்னமும் அவங்க சாப்பிடாம இருந்தா அதுவும் அவங்க உயிருக்கு ஆபத்து என்று சொல்லி விடுகின்றனர். ரங்க நாயகியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சரண்யா இப்போதைக்கு நீ இங்கிருந்து வெளியே போறது தான் நல்லது என்று சொல்ல சக்தி அப்செட் ஆகிறாள். 

செல்வகணபதி வீட்டை விட்டு வெளியே போ என்று என் வாயால சொல்ல வச்சிடாத என்று சொல்ல சக்தி வேறு வழி இன்றி வீட்டை விட்டு வெளியேற வெற்றி கண்கலங்கி நிற்கிறான். இது பிரச்சனைகளுக்கு நாம் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்பதை நிரூபித்து இந்த வீட்டுக்குள் வருவேன் என்று சொல்லி வெளியே வர பூஜாவும் சரளாவும் ஆட்டோவில் வந்து நிற்க, ரங்கநாயகி மீண்டும் அவர்களோடு கைகோர்க்கிறாள். இதனால் வெற்றியும் சக்தியும் உச்சகட்ட அதிர்ச்சியடைகின்றனர். 

வெற்றி உன்னுடன் நானும் வருகிறேன் என்று சொல்ல பூஜா ரங்க நாயகி என்ன வேணும்னாலும் செய்வா.. நீ இங்கே இருக்கிறது தான் நல்லது என சக்தி தனியாக வெளியேறுகிறாள். இதனைத் தொடர்ந்து புஷ்பா மெஸ்ஸை எழுதி தருமாறு மீனாட்சியை மிரட்ட மூன்று பெண்களும் புஷ்பா கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி வழக்கம் போல மெஸ்ஸை திறக்கின்றனர். 

மறுநாள் புஷ்பா அடியாட்களோடு வந்து மெஸ்ஸை அடித்து ஒன்றை வைத்து 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்க வெற்றி அந்த பணத்தை கொடுக்க இது ரங்கநாயகி பணம் என்று வாங்க மறுக்கிறாள். இதனால் சக்தி அந்த பணத்தை நாங்க தருகிறோம் என்று வாக்கு கொடுக்கிறாள். சக்தி 10  லட்சம் ரூபாய் பணத்தை எப்படி புரட்டப் போகிறாள்? சொன்னபடி மெஸ்ஸை மீட்டெடுப்பாளா என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தனுஷ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி-கமல்!?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News