காசியில் இளம் நடிகை தற்கொலை...? - படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் விபரீதம்!

வாரணாசியில் படப்பிடிப்பாக சென்ற இடத்தில், 25 வயதான நடிகை ஒருவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 26, 2023, 03:55 PM IST
  • டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாக நடிக்க தொடங்கியுள்ளார்.
  • சமூக வலைதளங்களில் இவருக்கு என்று பெரும் ரசிகர் பட்டளாமே உள்ளது.
காசியில் இளம் நடிகை தற்கொலை...? - படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் விபரீதம்! title=

போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகன்ஷா, 1997ஆம் ஆண்டு, அக்டோபர் 21 அன்று உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரில் பிறந்தார். 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் போஜ்புரி திரையுலகில் அகன்ஷா அறிமுகமானார்.

பிரபல போஜ்புரி நடிகையான அகன்ஷா துபேவின் வயது 25. இவர் வாரணாசி பனாரஸின் சாரநாத் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் சமூக ஊடகங்களிலும் பிரபலமானாவர். இவருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமும் உள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prashant Photography Deoria (@prashant_photography_deoria)

மேலும் படிக்க | எனக்கு பாய் பிரண்டாக வர வேண்டுமென்றால்... மிர்னாளினி ரவி கொடுத்த விளக்கம்!

அவர் அடுத்த நடிக்க உள்ள திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக வாரணாசியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு, காதலர் தினத்தன்று, நடிகை அகன்ஷா, சக நடிகர் சமர் சிங்குடன் காதலில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தார். அகன்ஷா, 'முஜ்சே ஷாதி கொரோகி' மற்றும் 'சாஜன்' உள்ளிட்ட போஜ்பூரி படங்களில் நடித்ததற்காக அங்கு மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடனம் மற்றும் நடிப்பு ரீல்ஸ்களைப் பகிர்ந்துகொண்டு டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். நேற்றிரவு கூட, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். 

நேற்று வெளியிட்ட ரீல்ஸ்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared b(@akankshadubey_official)

அகன்ஷாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,"புதிய படமான நாயக்கின் முதல் நாள் படப்பிடிப்பில் இன்று கலந்துகொள்ள இருந்தார். படக்குழுவினர் வாரணாசியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இன்று காலை 9 மணியளவில் அவரது மேக்கப் மேன் அவரது ஹோட்டல் அறைக்கு அழைக்கச் சென்றபோது, அவர் அறையில் இறந்து கிடந்தார். அவர் அக்லேஷ் வர்மாவுடன் சேர்ந்து படப்பிடிப்பில் நடிக்க இருந்தார்" என்றார். 

மேலும் படிக்க | ராஷ்மிகா மற்றும் ஜிவிபிரகாஷ் இணையும் புதிய படம்! பூஜையுடன் தொடக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News