கன்றுக்குட்டிக்கு தாயாக மாறிய இளம் பெண்... இந்த வீடியோ பார்த்தாலே மனசு லேசாகிடும்!

Viral Video: ஆதரவற்று கிடந்த கன்றுக்குட்டியை மீட்டு முறையாக பராமரிக்கும் பெண்ணுக்கும், அந்த கன்றுக்குட்டிக்கும் இருக்கும் பாசப்பிணைப்பை இந்த வைரல் வீடியோ நமக்கு உணர்த்துகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 10, 2024, 04:57 PM IST
  • இந்த வீடியோ கடந்த ஆக. 31ஆம் தேதி வெளியானது.
  • அந்த கன்றுக்குட்டியை கடந்த ஆக. 1ஆம் தேதி அன்று மீட்டுள்ளனர்.
  • அதை மீட்கும்போது அது பிறந்த 10 நாள்களே ஆகியிருக்கும்.
கன்றுக்குட்டிக்கு தாயாக மாறிய இளம் பெண்... இந்த வீடியோ பார்த்தாலே மனசு லேசாகிடும்! title=

Animal Viral Video: தெருவில் அலையும் மிருகங்கள் படும் கஷ்டங்களை இங்கு பட்டியலிட்டு விவரிப்பது என்பது எளிதல்ல. நாய், பூனை போன்றவை மட்டுமின்றி ஆடுகள், மாடுகள் என பல மிருகங்கள் போதுமான மனித பராமரிப்பு இன்றியும், மனிதர்களின் பேராசையாலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் அதுகுறித்து யாருக்கும் குற்றவுணர்ச்சி என்பது ஒரு துளியும் இல்லை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். 

அப்படியிருக்க, பசு கன்றுக்குட்டி ஒன்று தெருவில் நாய்கடிகளால் ஏற்பட்ட காயங்களுடனும், மிகுந்த துர்நாற்றத்துடன் இருந்துள்ளது. ஆதரவின்றி கிடந்த அந்த கன்றுக்குட்டியை பெண் ஒருவர் மீட்டு தனது இடத்திற்கு கொண்டு சென்று அதன் காயங்களுக்கு மருந்திட்டு, அதை சுத்தப்படுத்தி பராமரித்துள்ளார். தற்போது அந்த பசுவுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே நல்ல பாசப் பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. அந்த பெண் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடும் ரீல்ஸ் மூலம் ராதா என்கிற கன்றுக்குட்டி எப்படி அவரிடம் பாசத்துடன் விளையாடுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். 

'மனிதநேயத்தை மீட்டெடுப்பது'

குஷி சிங் என்ற பெண்மணி Restoring Humanity என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பக்கத்தை வைத்துள்ளார். அதாவது, இந்த பக்கத்தின் பெயர் அர்த்தம் என்னவென்றால் 'மனிதநேயத்தை மீட்டெடுப்பது' ஆகும். குஷி சிங் என்ற அந்த பெண்மணி அவரது ஊரில் அவதிப்படும் பல மிருகங்களை தத்தெடுத்து தனது பண்ணையில் வைத்து பராமரித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆக. 1ஆம் தேதி வெளியிட்ட ஒரு வீடியோவில்தான் ராதா என்ற அந்த கன்றுக்குட்டியை சாலையில் இருந்து கண்டெடுத்ததாக குஷி சிங் தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்க | Viral Video: இது என்னடா வீரனுக்கு வந்த சோதனை... நாகப்பாம்பை கண்டு பதுங்கிய புலி குட்டி...

கன்றுக்குட்டியை மீட்ட குஷி சிங்

குஷி சிங் அந்த கன்றுக்குட்டியை மீட்டபோது அது பிறந்து 10 நாள்களே ஆகியிருக்கும் என்றார், அதன் தாய் விபத்தில் உயிரிழந்துவிட்டதால் சாலையில் ஆதரவின்றி இந்த கன்றுக்குட்டி சுற்றித்திரிந்துள்ளது. அதில் பல்வேறு தெருநாய்களால் தாக்கப்பட்டு, கன்றுக்குட்டி காயமடைந்திருந்தது. மேலும், அந்த புண்களில் சீழ் வடிந்து புழுக்களும் அதிகம் காணப்பட்டன. அப்படியிருக்கையில், குஷி சிங் அதனை மீட்டு புண்களுக்கு மருந்திட்டு, உடம்பை சுத்தப்படுத்தி, உணவளித்து பராமரிப்பதை ஆக. 1ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் பதிவுசெய்திருந்தார். 

ராதா காட்டும் பாசத்தை பாருங்க

ராதாவை மீட்டபோது அவரது உடலில் ஆயிரக்கணக்கான புழுக்கள் இருந்ததாக குஷி சிங் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் ராதா அவர்களுடன்தான் வசித்து வருகிறது. ராதா உடன் குஷி சிங் விளையாடும் வீடியோவும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் காண முடிகிறது. அந்த வகையில், கடந்த ஆக. 31ஆம் தேதி குஷி சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது 1 மில்லியன் வியூஸ்களை தாண்டி சென்று பெரும் வைரலாகி உள்ளது. 

வைரலான வீடியோ

அந்த வீடியோவில், குஷி சிங் ராதா... ராதா என பெயர் சொல்லி அழைக்க மாட்டுக் கொட்டகையில் இருந்து அந்த கன்றுக்குட்டி ஓடி வருவதை காண முடிகிறது. குஷி சிங் பக்கத்தில் வந்த உடன் அந்த கன்றுக்குட்டி, குஷி சிங்கை கொஞ்சுவதை பார்க்கும்போது மனது லேசாகிவிடுகிறது. குஷி சிங் எங்கு சென்றாலும் ராதாவும் பின்னாலேயே  செல்கிறது. குஷி சிங் ராதாவுக்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுக்கிறார். அதுவும் சமத்தாக அதை குடித்துக்கொண்டு விளையாடுகிறது. இந்த வீடியோதான் தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

ராதாவின் கதை

அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் குஷி சிங் 'ராதாவின் கதை'-ஐ பகிர்ந்துள்ளார். அதில்,"ராதா பிறந்து 10 நாட்களில் அம்மா சாலை விபத்தில் இறந்துபோனது. ராதா தனியாக சாலையில் சுற்றித் திரிந்தது. நாய்களால் துரத்தப்பட்டு பலத்த காயம் அடைந்து, புழுக்களாலும் காயங்கள் ஏற்பட்டது, இரண்டு காதுகளும் அழுகிவிட்டன. அதற்கு பீடிங் பாட்டிலில் உணவளிக்கிறேன். கடந்த 1.5 மாதங்களாக ராதா என்னுடன் இருக்கிறது. ராதா மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பால் தவிர வேறு எதையும் சாப்பிடாது, அதனால்தான் உடல் மெலிந்து காணப்படுகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

தாயாக மாறிய இளம்பெண்

குஷி சிங்கிடம் விண்ணளவு இருக்கும் மனிதாபிமானமும், ராதா குஷி சிங்கிடம் காட்டும் அன்பும், பாசமும் இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்கும். நிச்சயம் வாய் இல்லா ஜீவன்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாகவோ, அவைக்கு தீங்கு விளைவிக்கும் விதமாகவோ செயல்படும் முன் இந்த வீடியோவை மனிதர்கள் பார்ப்பது நல்லது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் குஷி சிங்கையும் அவரது நற்பணியையும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவின் கீழ் ஒருவர்,"ராதா அதன் தாயை இழக்கவே இல்லை... பெற்றெடுத்த தாயை மட்டுமே இழந்தது" என குஷி சிங்குக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அந்த பதிவரின் வார்த்தை நூற்றுக்கு நூறு நிதர்சனமான ஒன்றாகும். 

மேலும் படிக்க | கதவை தட்டி கி லிகாட்டிய பாம்பு: வீடியோ எடுத்தவனை சும்மா விடுமா? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News