பாம்பை பிடிக்க குளத்தில் குதித்த இளைஞன்! பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ

Snake Viral Video: ஆபத்தான மலைப்பாம்பை பிடிக்க ஆற்றில் குதித்த இளைஞனின் செயல் பார்க்கும் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது. நஞ்சு கொண்ட பாம்பை, நீரில் சென்று பிடித்து வரும் இளைஞனுக்கு துணிச்சல் மிகவும் அதிகம் தான். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 12:12 PM IST
  • இரவு நேரத்தில் பாம்பைப் பிடிக்கும் இளைஞர்
  • துணிச்சல்கார இளைஞரைப் பார்த்த பாம்புக்கே பயம்
  • இள ரத்தம் பயமறியாதோ?
பாம்பை பிடிக்க குளத்தில் குதித்த இளைஞன்! பதைபதைக்கச் செய்யும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதமான விஷயங்களை நமக்குக் கொடுக்கிறது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கையும், விளையாட்டாக நகைச்சுவையையும் அள்ளித் தெளிக்கும் உலகமாக மாறிவிட்டது இணையம். அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பாம்புகள் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் சில வீடியோக்கள், நமது அச்சத்தை உச்சத்தில் ஏற்றுகின்றன என்றால், சில திகிலூட்டுகின்றன. சில பாம்புகல் மட்டுமே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆனால், தற்போது ஒரு துணிச்சல்கார இளைஞரின் அசட்டுத்தனமான செயல் வைரலாகிறது.

தற்போது வைரலாகும் அந்த வீடியோவில்,ஆபத்தான மலைப்பாம்பை பிடிக்க ஆற்றில் குதித்த இளைஞனின் செயல் பார்க்கும் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துகிறது. நஞ்சு கொண்ட பாம்பை, நீரில் சென்று பிடித்து வரும் இளைஞனுக்கு துணிச்சல் மிகவும் அதிகம் தான்.   

மேலும் படிக்க | வெள்ளை புலி பாத்திருப்பீங்க... வெள்ளை சிங்கத்த பாத்திருக்கீங்களா? - வைரல் வீடியோ 

பாம்புகளைக் கண்டு படையும் பயப்படும் என்றால், சிலருக்கோ அவை செல்லப்பிள்ளையைப் போல இருக்கின்றன. அவற்றுடன் கொஞ்சி விளையாடத் தொடங்கும் பாம்புப் பிரியர்களைப் பார்த்தால், நமக்கு பயமாக இருக்கிறது. பாம்புக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், இரவு இருளில் மலைப்பாம்பு வேகமாக ஆற்றுக்குள் செல்கிறது.

தண்ணீரில் செல்லும் பாம்பைப் பார்த்த, அசட்டு இளைஞர், அடுத்த் நொடியோ தொபுக்கடீர் என குதித்து, பாம்பை லபக் என்று பிடித்துக் கொண்டு வருகிரார். இந்த வீடியோ பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
பாம்பை பிடிக்கச் சென்ற இளைஞர்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், புதர்களில் இருந்து பாம்பு எப்படி வெளியேறி ஆற்றுக்குள் நுழைகிறது என்பதை காணலாம். அதைப் பார்த்த இளைஞர், எதையும் யோசிக்காமல் மேட்டில் இருந்து ஆற்றில் குதித்தான். தண்ணீரில் திடீர் அசைவைக் கண்டு மலைப்பாம்பு கூட பயந்து போகிறது. சிறிது நேரம் கழித்து அந்த நபர் மலைப்பாம்பை பிடித்து வெளியே வந்தார்.

வீடியோவின் முடிவில், அந்த நபர் தனது கைகளில் மலைப்பாம்பை தூக்கிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கலாம். Wildlifeanimall எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 'கனவு நனவாகிவிட்டது' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தெருவில் ஆடிய கோமாளிகளை தெறிக்கவிட்ட தெருநாய் வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News