30 ஆண்டுக்கு பிறகு சனியின் ராசியில் திரிகிரஹி யோகம், இந்த ராசிகளுக்கு லட்சுமி அருள்

Tirgrahi Yog in Kumbh 2023: வேத ஜோதிடத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனியின் மூல முக்கோண ராசியான கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இதன் மூலம் 3 ராசிக்காரர்கள் பணவரவு பெற்று பெரிய முன்னேற்றம் அடைவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 5, 2023, 12:42 PM IST
  • கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது.
  • 3 ராசிக்காரர்கள் பணவரவு.
  • சிலர் பெரிய முன்னேற்றம் அடைவார்கள்.
30 ஆண்டுக்கு பிறகு சனியின் ராசியில் திரிகிரஹி யோகம், இந்த ராசிகளுக்கு லட்சுமி அருள் title=

ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள் ராசி மாறும்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகமும் உண்டாகும். இந்த நேரத்தில் சனியின் ராசியான கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி, சூரியன், புதன் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகி வருவது அதிசய நிகழ்வாகும். சனி கும்ப ராசியில் நுழைந்து 30 வருடங்கள் ஆகிறது இந்த நேரத்தில் புதன், சூரியன் ஆகிய கிரகங்களும் கும்ப ராசியில் உள்ளன. இப்படி சனி, சூரியன், புதன் இணைவதால் கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகி வருகிறது. புதனும் சூரியனும் சேர்ந்து புதாதித்ய யோகத்தையும் உருவாக்குகிறார்கள். இந்த யோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது. இந்த நேரம் இந்த மக்களுக்கு மகத்தான செல்வத்தையும் மரியாதையையும் கொண்டு வரும். இப்போது எந்தெந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பலமான பலன்களைத் தரும்

ரிஷபம்: சனி, சூரியன், புதன் சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம் ரிஷப ராசியினருக்கு வலுவான பொருளாதார பலன்களைத் தரும். இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மரியாதை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டாத? உடனே இதை பண்ணிடுங்க!

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் காரணமாக, கெட்டுப்போன வேலைகளும் நிறைவேறத் தொடங்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகும் நபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

கும்ப ராசி: கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகி இந்த ராசிக்காரர்களுக்கு உச்சபட்ச பலன்களைத் தரும். இந்த மக்களின் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய மூலங்களிலிருந்து பணம் வரும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத்துணை முன்னேற்றம் அடையலாம். தொழிலுக்கு நல்ல நேரம்.

(பொறுப்பு துறப்பு; இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இன்று இந்த ராசிகளுக்கு அதிஷ்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News