வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வரும் சில ‘ஆபத்தான’ செயல்களை தவிர்க்கலாமே!

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யும் சில செயல்கள், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தி சாயும் நேரத்தில் செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2022, 09:06 PM IST
  • சில செயல்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரும்
  • சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துணி துவைப்பது மற்றும் உலர்த்துவது கூடாது.
  • வாஸ்து சாஸ்திரத்தில் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிறச்சனைகளுக்கு தீர்வு கூறப்பட்டுள்ளது.
வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வரும் சில ‘ஆபத்தான’ செயல்களை தவிர்க்கலாமே! title=

வாஸ்து சாஸ்திரத்தில் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிறச்சனைகளுக்கு தீர்வு கூறப்பட்டுள்ளது. அதே போன்று சில செயல்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் சந்திப்பதில்லை என்பது நம்பிக்கை. இந்நிலையில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்தி சாயும் நேரத்தில் சில வேலைகளை செய்யக் கூடாது என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யும் சில செயல்கள், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், தவறுதலாக கூட சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.

சனாதன தர்மத்தில் துளசி செடி வழிபடக்கூடியதாகவும், அன்னை லட்சுமியின் வடிவமாகவும் கருதப்படுகிறது. எனவே  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒருபோதும் தூங்க வேண்டாம், வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரியன் மறையும் நேரத்திலிருந்து 2 மணிநேரம் தூங்கக்கூடாது, ஏனென்றால் மாலையில் தூங்குபவர்கள் நோய்வாய்ப்படுவார்கள் ; அவர்களின் ஆயுட்காலம் குறைகிறது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியினால் உருவாகும் விபரீத ராஜயோகம்; அமோக வாழ்வை பெறும் ‘4’ ராசிகள்!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் பால், தயிர், உப்பு மற்றும் தானியங்களை தானம் செய்யக்கூடாது. ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் வீட்டில் தரித்திரம் தங்கி, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

துடைப்பத்தை தவறுதலாக கூட பயன்படுத்தாதீர்கள். இந்து மதத்தில் துடைப்பம் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை பெருக்குவது நல்லதல்ல. ஏனென்றால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இதை செய்தால், அன்னை லட்சுமி அவர்கள் மீது கோபப்படுவார். மேலும் அவர்களின் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு பதிலாக, வறுமை சூழத் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துணி துவைப்பது மற்றும் உலர்த்துவது கூடாது என கருதப்படுகிறது. ஏனெனில் இதைச் செய்வதன் மூலம் எதிர்மறை சக்தி வீட்டிற்குள் நுழைகிறது. இதைச் செய்வதன் மூலம் வீட்டில் இருந்து வந்த லட்சுமி வெளியேறுவாள்.

மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மாலையில் எந்த ஆணும் பெண்ணும் வீட்டின் வாசலில் அமரக்கூடாது, ஏனென்றால் மாலையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவாள். இந்த நேரத்தில் அவள் வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டால், அப்போது அன்னை லட்சுமி கோபித்துக்கொண்டு போய்விடுவாள். இதனால், பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தனுசில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு 2023 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News