வாழ்க்கையை புரட்டி போடும் குரு சண்டாள யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு நெருக்கடி!

குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2023, 05:36 PM IST
  • குரு சண்டாள தோஷம் நீங்க, குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும்.
  • ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது.
  • வேலை அடிக்கடி பறி போகும் நிலை உண்டாகும்.
வாழ்க்கையை புரட்டி போடும் குரு சண்டாள யோகம்!  ‘இந்த’ ராசிகளுக்கு நெருக்கடி!  title=

குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும். குரு சண்டள யோகம்  சாதகமாக இருந்தால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி வந்து சேரும். ஜாதகத்தில் வெவ்வேறு வீடுகளில் இருக்கும் நிலையை பொறுத்து, குரு சாண்டள யோகம் பலவிதங்களில் பலன்களைத் தருகிறது. ஜாதகத்தில் ராகுவை விட வியாழனின் நிலை வலுவாக இருந்தால், இந்த யோகம் பலவீனமாக இருக்கும், எனவே அதன் பாதிப்புகளும் குறைவாக இருக்கும். மாறாக ஜாதகத்தில் சண்டள யோகம் பலமாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும்.

குரு - சண்டாள யோகம், அசுப யோகமாக இருந்தால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவனது முயற்சிகள் அனைத்தும் வீண். அப்படிப்பட்டவர்கள் தேவையில்லாமல் சில சட்டச் சிக்கலில் சிக்கி பணம்,  மதிப்பு ஆகியவற்றை இழக்க நேரிடும். திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்காது. வேலை, வியாபாரம் என அனைத்திலும், நஷ்டம் ஏற்படுகிறது அல்லது வேலை அடிக்கடி பறி போகும் நிலை உண்டாகும். இதன் காரணமாக, ஒரு நபர் தனது வேலையை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும்.  இந்நிலையில், குரு, ராகு மற்றும் கேதுவின் சேர்க்கையால்  ஏற்படும் குரு சண்டாள யோகத்தினால் பாதிக்கப்படும் ராசிகளைப் பற்றி  அறிந்து கொள்ளலாம்.

குரு சண்டாள யோகத்தினால், கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

மேஷம்:

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 22-ம் தேதி குரு மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த ராசியின் லக்ன வீட்டில் குரு சண்டால் யோகம் உருவாகப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் 22 முதல் அக்டோபர் 30 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலையில் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும். பண இழப்பு ஏற்படலாம். அவமானகரமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது, அத்தகைய சூழ்நிலையில், கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளவும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

மிதுனம்:

ஜோதிட சாஸ்திரப்படி மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சண்டள யோகம் அசுபமான செய்திகளை கொண்டு வரும். இந்த ராசிக்காரர்கள் ஆறு மாதங்கள் கவனமாக நடக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், ஒரு நபர் பணம் தொடர்பான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பணியிடத்திலும் பல வகையான பிரச்சனைகள் காணப்படும். எனவே யாரையும் நம்பாமல், மிகவும் கவனமாக நடவடிக்கைகளையும் முடிவுகளையும் எடுக்கவும். பண இழப்பு மற்றும் வேலையில் சிரமம் அதிகரிப்பதால், இந்த நேரத்தை கடப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு குருவும் ராகுவும் ஒரே ராசியில் இணைவதால் சிரமம் ஏற்படும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் போன்றவற்றில் நஷ்டம் வரலாம். வாகனத்தைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவும். வியாபாரம் போன்றவற்றில் நஷ்டம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். மனம் கலங்கிவிடும். இதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் தொழிலில் பல பிரச்சனைகள் வரலாம்.

சில எளிய பரிகாரங்கள்

குரு சண்டாள தோஷம் நீங்க, குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர, பெற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். திங்கட்கிழமை இரண்டு முகம் ருத்ராட்சம் அணிவதும் நன்மை தரும். மேலும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் குரு சண்டாள தோஷம் நீங்கும். வீட்டில் அல்லது கோவிலில் விஷ்ணுவை வழிபடுவது குரு சண்டாள தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. குரு மந்திரம் 'ஓம் ப்ரம் பிரிம் ப்ரௌன் சஹ குர்வே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். வீட்டில் வாழை கன்றை நட்டு தினமும் வழிபடுவது சண்டள யோகத்தில் இருந்து நிவாரணம் பெற மிகவும் சிறந்த வழியாகும். இது தவிர ராகு மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கவும்.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News