சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘5’ ராசிகள்!

சனி மகாதசை, ஏழரை நாட்டு சனி உள்ள ராசிகளில் சனி வக்ர பார்வை உள்ளது. இதனால் இவர்கள் உடல், மன, பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 29, 2022, 11:18 AM IST
  • சனி 2023 ஜனவரி வரை வக்ர பார்வையினால் பாதிக்கப்போகும் ராசிகள்.
  • சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார்.
  • சனிக்கிழமை தோறும் சனி கோவிலில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

Trending Photos

சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘5’ ராசிகள்! title=

சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது, ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதைத் தொடர்ந்து ஜூலை 12-ம் தேதி சனி மகர ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சியாகியுள்ளது. இந்தச் சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாடு சனியும், மிதுனம், துலாம் ராசியில் சனி திசையும் நடக்கிறது.  சனி 2023 ஜனவரி வரை மகர ராசியில் இருப்பார். 

சனியின் மகாதசை உடல், மனம் மற்றும் நிதி நிலையை பாதிக்கிறது. சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி மகாதசை, ஏழரை நாட்டு சனி உள்ள ராசிகளில் சனி வக்ர பார்வை உள்ளது. இதனால் இவர்கள் உடல், மன, பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  எனவே, இந்த ஐந்து ராசிக்காரர்களும் பொறுமையாக செயல்பட்டு, தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவும்.

மேலும் படிக்க |  Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்து, அந்த நபரின் கர்மா சரியில்லாமல் இருந்தால், பிரச்சனை தீவிரமடையும். எனவே, சனி திசை அல்லது ஏழரை நாட்டு சனியின் போது ஏழைகளுக்கு உதவ வேண்டும். சனிக்கிழமை தோறும் சனி கோவிலில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.

தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் ஏழரை நாடு சனியும், மிதுனம், துலாம் ராசியில் சனி திசையும் நடக்கிறது என்பதால்  இந்த 5 ராசிக்காரர்களும் சில பரிகாரங்களை செய்து வந்தால்,  சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News