இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை 2ம் தேதி பொற்காலம்

Saturday Shani Grah Upay: எந்தெந்த ராசிக்காரர்கள் சனிக்கிழமை சனிபகவானை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 1, 2022, 11:31 AM IST
  • இந்த 3 ராசிக்காரர்களுக்கு 2025 வரை ஜாக்பாட்
  • சனிபகவானை மகிழ்விக்க பரிகாரங்கள்
  • இந்த 5 ராசிக்காரர்களுக்கான சனிக்கிழமை சிறப்பு
இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை 2ம் தேதி பொற்காலம் title=

2 ஜூலை 2022 சனிக்கிழமை. சனிக்கிழமை நீதியின் கடவுளான சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. சனி பகவானின் நிலை மாற்றத்தால், பல ராசிகளில் சனி மகாதசை தொடங்குகிறது. தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாகுகிறார். சனி 5 ஜூன் 2022 முதல் வக்கர பெயர்ச்சியானது. ஜூலை 12ஆம் தேதி சனி மகர ராசிக்குள் நுழைகிறார். அதன்படி இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் சனிக்கிழமை சனிபகவானை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த 5 ராசிக்காரர்களுக்கான சனிக்கிழமை சிறப்பு
தற்போது மகரம், மீனம், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடந்து கொண்டிருக்கிறது. கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்பட்டவர்கள் நிதி, மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தருவதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ஏழரை சனியின் மூன்று கட்டங்கள் உள்ளன. மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டமும், கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாம் கட்டமும், மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாம் அல்லது கடைசி கட்டமும் நடக்கிறது. மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான் ஆவார். அதனால்தான் இந்த இரண்டு ராசிக்காரர்களும் சனியின் மகாதசையில் குறைவான தொல்லைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

சனிபகவானை மகிழ்விக்க பரிகாரங்கள்-
சனிக்கிழமையன்று, கோவிலுக்குச் சென்று, சனிபகவானுக்கு எண்ணெய், கருப்பு எள், நீலப் பூக்கள் மற்றும் உளுந்து ஆகியவற்றை சமர்பிக்கவும். இந்த நாளில் ஏழைகள், முதியவர்கள், பெண்களுக்கு உதவுங்கள். கருப்பு வஸ்திரம், எண்ணெய், உணவு, எள், உளுந்து, இனிப்புகள் போன்றவற்றை தானம் செய்யலாம். இந்த நாளில் ஓம் சனிச்சராயை நம என்று 108 முறை உச்சரிக்கவும். அல்லது சனி சாலிசா பாராயணம் செய்யவும்.

இந்த 3 ராசிக்காரர்களுக்கு 2025 வரை ஜாக்பாட் 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது. வெளியூர் பயணம் செல்லலாம். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எனினும் நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருளை அள்ளி வழங்குவார். நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்திருந்தால், சனி தேவன் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றியை அள்ளித் தருகிறார். கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் உணர்ந்து, பணியிடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News