இவர்கள் எல்லாம் அன்னதானம் சாப்பிடக்கூடாதாம்..! வாங்கிய வரமெல்லாம் வீணாபோகும்

கோயல்களில் கொடுக்கப்படும் அன்னதானங்களை குறிப்பிட்ட நபர்கள் வாங்கி சாப்பிடக்கூடாதாம். அதனால், கோயில் கோயிலாக சென்று வாங்கிய வரமெல்லாம் வீணாக போகும் என ஐதீங்கங்கள் கூறுகின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2023, 06:56 AM IST
இவர்கள் எல்லாம் அன்னதானம் சாப்பிடக்கூடாதாம்..! வாங்கிய வரமெல்லாம் வீணாபோகும் title=

அன்னதானம் ஏற்பாடு

மலை கோயில்கள் மற்றும் புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு தங்களுக்கு புன்னிய நிகழ்வுகள் ஏற்படவும், குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கவும் அன்னதானம் கொடுப்பார்கள். இதன் மூலம் நான்கு பேர் வயிறார சாப்பிட்டு வாழ்த்தும்போது அன்னதானம் கொடுத்தவர்களுக்கு புன்னியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொலைத்தூரத்தில் இருந்து கோயில்களுக்கு வருபவர்கள் தங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டத்தால் தெய்வத்தை மட்டும் வணங்கிவிட்டு ஒரு நேர உணவுகூட சாப்பிட முடியாமல் பசியுடனே திரும்பிச் செல்வார்கள். அவர்கள் அப்படி செல்லக்கூடாது என்பதற்காக நல் உள்ளம் படைத்தவர்கள் கோயில் பிரகாரத்தில் அன்னதானத்தை கொடுத்து அவர்களை பசியில்லாமல் செல்ல ஏற்பாடு செய்வார்கள்.

மேலும் படிக்க | மேஷத்தில் குரு உதயம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி, மகிழ்ச்சி

யாருக்கு அன்னதானம்?

இதேபோல் ஏழை எளியவர்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் இருப்பவர்கள் எல்லாம் கோயிலில் கொடுக்கும் அன்னதானத்தை நம்பியே இருக்கிறார்கள். அந்த ஒருவேளை உணவு அவர்களுக்கு அன்றைய பசியை போக்கும் வரப்பிரசாதமாக பார்ப்பார்கள். அத்தகையோர் இருக்கும் இடத்தில் எல்லாம் வசதியும், எங்கும் சாப்பிடுவதற்கான செல்வமும் பெற்றிருப்பவர்கள் சென்று அன்னதானத்தை வாங்குவது என்பது ஒருவேளை உணவுக்காக காத்திருப்பவர்களை சாப்பாட்டை பறிப்பதற்கு சமம். அதனால் கோயில் அல்லது புனித இடங்களுக்கு செல்பவர்கள் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் நபர்கள் சாப்பிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தில் பங்கு கொள்ளாதீர்கள்.

யார் வாங்கக்கூடாது? 

அன்னதானம் என்பதே உணவு கிடைக்காதவர்களுக்காக ஏற்பாடு செய்வது தான். ஆனால், அப்படிபட்ட நபர்களுக்கு கொடுக்கப்படும் உணவு இடத்தில் அவர்களை தவிர எல்லோரும் சென்று உணவருந்த நின்று கொள்கிறார்கள். இப்படி செய்வதால் புன்னிய தலங்களுக்கு சென்று நீங்கள் எத்தனை வரம் வாங்கி வந்தாலும், அது உங்களுக்கு கிடைக்காது. லட்சுமியின் கோபத்துக்கு உள்ளாகி, உங்களிடம் இருக்கும் செல்வமும் கரைய தொடங்கும்.

எந்த புனித இடங்களுக்கு சென்றாலும் உணவு இல்லாதவர்களுக்கு அன்னதானம் கொடுத்து பழகுங்கள். அவர்களுக்கு தான் தேவை இருக்கிறது. எல்லா செல்வமும் இருக்கும் ஒருவர் அன்னதானம் வாங்கி சாப்பிட வேண்டிய அவசியமில்லை. இதில் ராசி வேறுபாடு எல்லாம் இல்லை. உங்களால் ஒருவேளை உணவு வாங்கிச் சாப்பிட முடியும் என்றால், நீங்கள் அன்னதானத்துக்கு செல்ல வேண்டாம்.

மேலும் படிக்க | லட்சுமி அன்னைக்கு பிடித்தமான ராசிகள் இவைதான்: செல்வச்செழிப்பில் திளைப்பார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News