ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி இன்னும் இரண்டு ஐ.பி.எல். தொடர் விளையாடக்கூடிய தகுதியுடன் இருக்கிறார். தோனி ஏன் விளையாடுவதை நிறுத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை என்று சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2021, 01:23 PM IST
  • தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக விளையாடுவார்.
  • இன்னும் CSK அணிக்காக நல்ல ஒரு ஃபினிஷராக தோனி இருக்கிறார்.
  • ஐபில்எல் தொடரில் தோனி எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை.
ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு title=

பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni's cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனத்துடன் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் (CSK CEO Kashi Viswanathan), சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி (MS Dhoni) இன்னும் இரண்டு ஐ.பி.எல். தொடர் விளையாடக்கூடிய தகுதியுடன் இருக்கிறார். தோனி ஏன் விளையாடுவதை நிறுத்தினார் என்று எனக்குத் தெரியவில்லை என்று சிஎஸ்கேவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். எங்களைப் பொறுத்த வரை, சி.எஸ்.கே அணிக்காக எம்.எஸ்.தோனி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு கேப்டனாக, அவர் அணியை வழிநடத்துவார். அவர் கேப்டனாக அணிக்காக சிறந்த விஷயங்களைச் செய்து வருகிறார். மேட்சை வெற்றிகரமாக முடித்துத் தருவதற்கும், அணி வீரர்களை சிறப்பாக கொண்டு செல்ல அவரால் முடியும் என்றும் நாங்கள் நினைக்கிறோம் என்றார். 

அவர் இன்னும் CSK அணிக்காக நல்ல ஒரு ஃபினிஷராக இருக்கிறார். தோனிக்கு 40 வயதாகிறது (Dhoni Age). அடுத்த ஐபிஎல் மெகா ஏலத்திலும் (IPL Mega Auction) தோனியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளலாம். மேலும் சில ஆண்டுகள் ஐபிஎல்லில் தோனி விளையாடுவதைக் கிரிக்கெட் ரசிகர்கள் காணலாம்.

ALSO READ | Video: தகதகவென எரித்த தோனியின் புகைப்படம்; ரசிகர் அளித்த பரிவு

2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் சீசன் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super King) அணியின் கேப்டனாக தோனி இருந்து வருகிறார். இதுவரை 3 முறை ஐ.பி.எல். கோப்பைகளை சென்னை அணிக்காக வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி, தற்போது ஐ.பி.எல். போட்டியில் மட்டும் பங்கேற்று வருகிறார்.  ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபில்எல் தொடரில் தோனி எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை, அவருக்கு வயதாகி விட்டது. அவரால் முன்பு போல சிறப்பாக செயல்பட முடியவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் என செய்திகளும் வெளியாகின. 

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி (MS Dhoni to play IPL) இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடலாம்" என அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

ALSO READ | MS Dhoni: CSK அணியில் தல தோனி தொடருவாரா மாட்டாரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News