கேப்டன்சி விவகாரங்களை பி.சி.சி.ஐ கவனித்துக் கொள்ளும்- தோனி

- நான் எனது ஆட்டத்தை மகிழ்வுடன் ஆடுகிறேன். கேப்டன்சி விவகாரங்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்றார்.  

Last Updated : Jun 7, 2016, 07:38 PM IST
கேப்டன்சி விவகாரங்களை பி.சி.சி.ஐ கவனித்துக் கொள்ளும்- தோனி title=

ரவி சாஸ்திரி அவர்கள் அனைத்து விதமான போட்டிகளுக்கு `விராத் கோலி` கேப்டனாக்க வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு தோனி பதிலளித்து:- நான் எனது ஆட்டத்தை மகிழ்வுடன் ஆடுகிறேன். கேப்டன்சி விவகாரங்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும் என்றார்.  

மேலும் இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்:-  இந்தி தெரிந்திருப்பது ஒரு அளவுகோல்தான் ஆனால் அதுவே ஒரே அளவுகோல் அல்ல. மொழி ஒரு பிரச்சினையல்ல, நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜிம்பாப்வே தொடர் குறித்து கேள்விக் பதிலளித்த அவர்:- ஜிம்பாப்வே அணி எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது புதிய வீரர்களுடன் ஆட உள்ளதால் ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த தொடர் இருக்கும்.

ஏற்கனவே சந்தீப் பாட்டீல், ரவிசாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். 

Trending News