India Vs Pakistan: டிராவிட் பேச மறுத்த அந்த 4 வார்த்தை; பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிரிப்பலை

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருக்கும் நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் டிராவிட் பேச மறுத்த 4 வார்த்தையால் சிரிப்பலை உருவானது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2022, 01:13 PM IST
  • மீண்டும் மோதிக் கொள்ளும் இந்தியா - பாகிஸ்தான்
  • டிராவிட் பேச வந்த அந்த 4 வார்த்தையை நிறுத்திக் கொண்டார்
  • பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட சிரிப்பலை
India Vs Pakistan: டிராவிட் பேச மறுத்த அந்த 4 வார்த்தை; பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிரிப்பலை title=

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதிக் கொண்ட முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஜொலித்த ஹர்திக் பாண்டியா, சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பான பேட்டிங் பங்களிப்பு கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று புது உத்வேகத்தை பெற்றுள்ளது. அதே உத்வேகத்துடன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை மீண்டும் சந்திக்க இருக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பந்துவீச்சு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும்போது, பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணியிலும் நல்ல பந்துவீச்சு வரிசை இருக்கிறது. அவர்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் இந்திய அணியில் நல்ல முடிவுகளை கொடுக்கக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் எனக் கூறிவிட்டு திடீரென சிரிக்கத் தொடங்கினார். 

என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கும்போது, எஸ் வரிசையில் இருக்கும் 4 வார்த்தைகளை பயன்படுத்த நினைத்தேன். அந்த வார்த்தை வந்துவிட்டது, சுதாரித்துக் கொண்டு நிறுத்திவிட்டேன். நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் என நகைச்சுவையாக கூறினார். அதாவது Sexy என்ற வார்த்தையை தான் அவர் பேச வந்தார். பத்திரிக்கையாளர்களும் அவர் பேச வார்த்தையை புரிந்து கொண்டதால், அந்த இடத்தில் சிரிப்பலை நிலவியது. 

விராட் கோலி குறித்து பேசும்போது, அவர் ஒரு சில நிமிடங்கள் களத்தில் இருந்தாலே போட்டியை மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அவரைப் போன்ற வீரர்கள் அணிக்குத் தேவை. பிட்சைப் பொறுத்து ரிஷப் பன்ட் உள்ளிட்ட வீரர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்தார். 

மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!

மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News