4_வது ஒரு நாள் போட்டி: இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Last Updated : Sep 1, 2017, 10:46 AM IST
4_வது ஒரு நாள் போட்டி: இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி title=

இந்தியா - இலங்கைக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் விஷவா பெர்னாண்டோ பந்தில் கேட்ச் அவுட் ஆனார். 

அதன் பிறகு ரோஹித் சர்மாவுடன் இணைந்த விராட் கோலி இருவரும் நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சதம் அடித்தனர். விராத் கோலி 96 பந்தில் 131 ரன்கள் எடுத்து மலிங்கா பந்தத்தில் அவுட் ஆனார். இது லசித் மலிங்காவின் 300-ராவது விக்கெட் ஆகும். 

ரோஹித் சர்மா 88 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்திக் பாண்டியா 19(18) ரன்களும், லோகேஷ் ராகுல் 7(8) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். 

மனிஷ் பாண்டே மற்றும் தோனி அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் மனிஷ் பாண்டே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மனிஷ் பாண்டே 50(42), தோனி 49(42) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.

இலங்கை அணியின் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட் எடுத்தார். அடுத்து இலங்கை அணி வெற்றி பெற 376 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கியது. 

முதல் 10 ஓவரில் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. பிறகு லஹுரு திருமன்னே உடன் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் நன்றாக விளையாடினார். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்தது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் நன்றாக ஆடி 70(80) ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தெர்தேடுக்கப்ட்டார்.

இந்திய அணி சார்பில் ஜாஸ்பிரித் பம்ரா, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், ஷர்டுல் தாகூர் மற்றும் அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இரண்டு ரன்-அவுட் செய்யப்பட்டது.

இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News