'வேண்டுமென்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ஓபிஎஸ்' - டிஜிபியிடம் மனு அளித்த ஜெயக்குமார்

வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் செயல்படுகின்றனர் என அதிமுகவின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 20, 2023, 07:03 PM IST
  • சேலத்தில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக கொடியை பயன்படுத்தியதால் இபிஎஸ் தரப்பு புகார்.
  • மேலும், ஓபிஎஸ் தரப்பினரும் இபிஎஸ் தரப்பு மீது சேலத்தில் புகார் அளித்தனர்.
  • காவல்துறையினர் இபிஎஸ் தரப்பினர் மீது நடவடிககை எடுததுள்ளது.
'வேண்டுமென்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ஓபிஎஸ்' - டிஜிபியிடம் மனு அளித்த ஜெயக்குமார் title=

அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சேலம் காவல் துறையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகார் அளிக்கப்பட்டது. இதேபோன்று முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. 

ஆனால் இந்த புகார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு அளித்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,"அஇஅதிமுகவின் கொடியையோ கட்சி பெயரையோ குறிப்பாக இரட்டை இலை கூட ஓபிஎஸ், அவரின் அணியை சார்ந்த எவரும் ADMK என்று பயன்படுத்தக்கூடாது, பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள்.

மேலும் படிக்க | அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது - வைத்தியலிங்கம்

அதே போன்று கட்சி போஸ்டர்களில் கூட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையோ கட்சி சின்னத்தையோ குறிப்பாக கட்சி கொடியை எந்த வகையிலும் பயன்படுத்தாக்கூடாது என்ற வகையில், தெளிவாக கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையிலும், இன்றைக்கு சட்டத்தை மதிக்காமல், சட்டம் எங்களை என்ன செய்யும் என்ற வகையில் ஓபிஎஸ் அணி செயல்பட்டு வருகிறது. 

அந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இன்று டிஜிபி அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்துள்ளோம். வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் காவல் துறையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நாங்கள் புகார் அளித்தோம். இதேபோன்று பன்னீர்செல்வம் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த புகார் ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்த எங்கள் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

ஆகையால் இது தொடர்பாக அஇஅதிமுக சார்பாக டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் மனு அளித்தோம். அவரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே இன்றைக்கு கட்சி அலுவலகம், கட்சி சின்னம் கட்சி கொடி போன்றவற்றை நாங்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நிலையில் எவரும் சொந்தம் கொள்ள முடியாது. அதை மீறி செயல்பட்டால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படும்" என தெரிவித்தார். 

மேலும் படிக்க | போட்டி தேர்வுகளில் தூள் கிளப்ப... அரசு அளிக்கும் இலவச பயிற்சி - விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News