சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் தேவை - அழகிரி

சென்னைக்கு இன்னுமொரு விமான நிலையம் தேவை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 28, 2022, 08:19 PM IST
  • பரந்தூரில் விமான நிலையம் அமையவிருக்கிறது
  • பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
  • இன்னுமொரு விமான நிலையம் வேண்டுமென அழகிரி பேச்சு
 சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் தேவை - அழகிரி title=

செப்டம்பர் 7ஆம் தேதி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நிலையில், அது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது. இந்தக் கூட்டத்தில்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி,காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கே.எஸ். அழகிரி மற்றும் ராஜு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அழகிரி, “சமூக நீதிக்கு இன்று பங்கம் ஏற்பட்டுள்ளது, அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க ராகுல் காந்தி மக்களிடம் சென்று அதை எடுத்து சொல்ல இருக்கிறார். இந்த நடைபயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார். நான் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்போம். இந்த நடைபயணத்தின் போது, பாஜகவின் தவறான பொருளாதார, விவசாய கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வோம்.

Rahul Gandhi

காங்கிரஸ் நூறு ஆண்டுகளை கடந்த பெரிய விருட்சம். பொருளில்லாமல் எதை வேண்டுமானாலும் பேசினால் புகழ் கிடைக்கும், பாஜக தலைவர் அண்ணாமலை, பெரிய குற்றச்சாட்டை சொல்கிறார், அதன் பிறகு அதன் மேல் யாராவது பதில் சொன்னால் அதை அவர் கண்டு கொள்வதில்லை. ஆளும் அரசுக்கு எதிராக பேசுவதால், பாஜகவிற்கு தமிழகத்தில் பிரபலத்துவம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் பள்ளி பூட்டப்பட்ட அவலம்!

சென்னையில் இன்னொரு விமான நிலையம் வேண்டும், அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும். ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் சென்னைதான் வலிமையாக இருந்தது, ஆனால், தற்போது பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வளர்ந்துவிட்டன. தொழிற்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி வளர்ச்சி வரும்” என்று கேள்வி எழுப்பினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News