பாஜக என்றால் இந்துத்துவா! குடும்ப அரசியல் கட்சி திமுக! கோவை அதிமுக வேட்பாளர் விமர்சனம்!

Singai G Ramachandran : வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது!? வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும் என்று விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 26, 2024, 05:54 PM IST
  • வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது!
  • திமுகவை தாக்கிப் பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன்
  • ஆளும் கட்சிகளை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர்...
பாஜக என்றால் இந்துத்துவா! குடும்ப அரசியல் கட்சி திமுக! கோவை அதிமுக வேட்பாளர் விமர்சனம்! title=

AIADMK Candidate In Election Campaign : கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கரூரை சேர்ந்த பாஜகவின் அண்ணாமலை, மறைந்த என் தந்தை பற்றி பேசியுள்ளார். அது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 15 வயது இருக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார்.அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அப்பா இருந்தார் ஆனால் எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை என்று வருத்துடன் பேசினார்.

அண்ணாமலை கீழ் தரமாக தவறாக பேசியுள்ளார், அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்ட வேண்டும். என் அப்பா இறந்தபோது என்னிடம் கூட காசு இல்லாமல் கடன் வாங்கி தான் அவருக்கு காரியம் செய்தேன்.அப்பா மறைவிற்கு பிறகு என் அம்மா தான் என்னை கஷ்டபட்டு வளர்த்தார் என்றும், என் அம்மா இல்லானா நான் இல்லை என்றும் கண்கலங்கக் கூறினார். இறந்த ஒருவரை பற்றி அண்ணாமலை பொய்யான தகவல் பரப்பி வருவது மோசமானது என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தெரிவித்தார்.

குஜராத்தில் படித்து மெடல் வாங்கி உள்ளேன். திமுக வேட்பாளரும்,பாஜக வேட்பாளரும் ஆக்கபூர்வமான கோவை வளர்ச்சி பற்றி பேசலாம் என்று கூறிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி சுகாதரத்தில் இந்தியாளவில் 42-வது இடத்தில் இருந்தது என்றும், திமுக ஆட்சி வந்த பிறகு 180 இடத்திற்கு சென்றுவிட்டது என்றும் விமர்சனம் செய்தார்.

திமுக ஆட்சியில் பொய்யாக அதிகளவில் வழக்குகள் போடுகிறார்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், போதை பொருள் என்பது தவறான செயல் என்றும், போதை பொருள் ஆண், பெண் வித்தியாசம் தெரியாமல் அதிக தப்பு செய்ய தூண்டிவிடுகிறது, கஞ்சா,கஞ்சா சாக்லெட்,மாத்திரை,போதை பொருள் ஆகியவற்றை திமுக ஆட்சியில் பெருகி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | 6 பவுன் தங்கச் சங்கிலி பரிசு கொடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! அதிர்ஷ்டம் யாருக்கு?

அதிமுக ஆட்சியில் கோவை நல்ல வளர்ச்சி அடைந்திருந்த நிலையில்,  திமுக ஆட்சியில் வளர்ச்சி அடையாமல் கோவை பின் தங்கியுள்ளது என்று திமுகவை தாக்கிப் பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், ஊழல் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கோ பாஜகவுக்கோ அல்லது மோடிக்கோ அருகதை கிடையாது. தேர்தல் பத்திரம் மூலம் 6000 கோடி வாங்கி உள்ளார்கள் என்றும், அவர்களுக்கு திமுகவினர் குறைந்தவர்கள் இல்லை என்றும் விமர்சித்தார். 

33 மாதம் ஆட்சி காலத்தில் திமுக ஒன்னும் செய்யவில்லை என்றும், பாஜக மற்றும் திமுகவும் ஊழலை பற்றி பேச கூடாது என்றும் கூறிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், இந்தி தெரியாது போடா என்று சொன்ன உதயநிதி தற்போது இந்தி படத்தை விநோயகம் செய்து வருகிறார். கேலோ இந்தியா போட்டியில் உதயநிதி மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து வரவேற்றனர்.

மோடி கோவையில் என்ன சாதனை செய்தார்?? கோவை சாதனைகளை விட்டுவிட்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் அஞ்சலி செய்து அரசியல் செய்கிறார்கள். அந்த சம்பவத்தை நாங்கள் மறக்க நினைக்கிறோம் என்றால், ஆனால் பாஜகவினர் அதனை நினைவுபடுத்துகிறார்கள் என்று சாடினார்.

திமுக இந்த பக்கம், பாஜக அந்த பக்கம் இருந்து கொண்டு வஞ்சிக்கிறார்கள். தமிழர்கள் மனித நோயம் கொண்டவர்கள், இவர்கள் செய்வதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் எச்சரித்தார். 

மேலும் படிக்க | என்னடா இது ஓபிஎஸ்சுக்கு வந்த சோதனை.. ஒரே பெயரில் 5 பேர் போட்டி!

கோவை மக்கள் யாரும் போய் உதயநிதி பார்க்க முடியுமா?? இல்லை அண்ணாமலையை தான் பார்க்க முடியுமா?? என்று கேள்வி எழுப்பினார். நான் கோவையில் உள்ளவன் என்னை யார் எப்போ வேண்டுமேனாலும் வந்து பார்க்கலாம் என்று கூறினார்.

இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கு தான் போட்டி, அண்ணாமலைக்கு இங்கு இடம் இல்லை என்று கூறிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், தமிழ்நாட்டிற்கும், கோவை மக்களுக்கும் பாஜக என்ன நல்லது செய்துள்ளது என கேள்வி எழுப்பினார். கோவையில் பாஜக 60% வாக்கு வாங்கினால் நான் அரசியல் விட்டு விலகுகிறேன் என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்தார்.

கோவை வளர்ச்சியடைய நிறைய விஷயங்கள் உள்ளது. அதனை தான் நாம் வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொய் பேசி வருகிறார் என்று அண்ணாமலையை விமர்சனம் செய்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், கோவையில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வெற்றி பெற்ற பிறகு ஆண்டுதோறும் ஆய்வு கூட்டம் நடத்துவேன் என்றும், ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று உறுதியளித்தார். அண்ணாமலை 20,000 புத்தங்கள் படித்தேன் என்று சொல்லுவது முற்றிலும் பொய் என்றும், அவர் பிறந்த முதல் இப்ப வரை படித்து இருந்தலே வெறும் 14,000 புத்தங்கள் தான் படித்து இருக்க முடியும் என்று கூறினார்.

பாஜக இந்துத்துவா கட்சி, திமுக குடும்ப அரசியல் கட்சி என்றும் ஜனநாயகம் முறையில் நம்பிகையாக இருக்கிறோம். அதன் படி நடந்து கொள்வோம் என்று கூறினார். தமிழகத்தில் 39 சீட் பாஜக வெற்றி பெற்றால் அரசியல் விட்டு போவதாக தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது. வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும் என்றும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் கூறினார்.

மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News