அதிமுக அலுவலகத்தில் பதற்றம்! கற்களை வீசி தாக்குதல்!

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கியதால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 10:52 AM IST
அதிமுக அலுவலகத்தில் பதற்றம்! கற்களை வீசி தாக்குதல்! title=

இன்று அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.  அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட பட்ட நிலையில் அது தற்போது உடைக்கப்பட்டு உள்ளது.  

 

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று திட்டமிட்டபடி தொடங்குமா?

 

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இபிஎஸ் ஆதார்வாலருக்கும் கைகலப்பு ஏற்பட்டதால் போலீசார் அதிகமாக உள்ளனர். அதிமுக தலைமையக பூட்டை உடைத்து ஒ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் பேனரில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.

 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News