கொரோனா நிலவரம்: தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு பாதிப்பு; 101 பேர் மரணம்

தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,287 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 21, 2020, 07:05 PM IST
கொரோனா நிலவரம்: தமிழகத்தில் இன்று 5,995 பேருக்கு பாதிப்பு; 101 பேர் மரணம் title=

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,287 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 101 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 5,764 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 53,413 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 83.74 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 

இன்றைய நிலவரம்: 21-08-2020
கொரோனா பாதிப்பு -  5,995
சென்னை - 1,287
மரணம் - 101 
குணமடைந்தவர்கள் - 5,764
பரிசோதனை செய்யப்பட்டவர்கள் - 74,344

Corona situation in channai

 

 

 

Trending News