கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவது சரியில்லை: மு.க. ஸ்டாலின்

ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 7, 2020, 07:03 AM IST
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவது சரியில்லை: மு.க. ஸ்டாலின் title=

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமா நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் நீட் தேர்வை நடத்துவது என்பது மேலும் மாணவர்களுக்கு சிக்கலை  ஏற்படுத்தும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் 15.93 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் 2020 க்கு விண்ணப்பித்துள்ளனர். 

இந்த ஆண்டுக்கான மருத்துவ கல்லூரிகளின் நுழைவுத் தேர்வான நீட் ஜூலை மாதம் நடைபெறும்  என மத்திய அரசின் அறிவிப்பு என்பது, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மீது எந்த அக்கறையுமில்லை என்பதே காட்டுகிறது என மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றம் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது என்ற உண்மையை கருத்தில் கொண்டு, இதுபோன்ற நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசையும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று, நீட் தேர்வு ஜூலை 26 ஆம் தேதியன்று நடைபெறும். ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. 

இதுக்குறித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு (HRD) அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்,  நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தேர்வு மையங்கள், தேர்வு நடைபெறும் மையங்கள், தேர்வு நடைபெறும் நேரம் ஆகியவை இருக்கும். தேசியத் தேர்வுகள் முகமை இந்த நுழைவுச் சீட்டுகளை வெளியிடும்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், "ஜூலை 18 முதல் 23 வரை JEE-மெயின்கள் நடைபெறும், ஆகஸ்ட் மாதத்தில் JEE-மேம்பட்டவை நடைபெறும். நீட் ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்படும்" என்று நிஷாங்க் கூறினார். 

Trending News