மருத்துவர்கள், ஊடகத்துறையினர், வழக்கறிஞர்களுக்கு இ-பதிவு தேவையில்லை: தமிழக காவல்துறை

மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், ஊடகத்துறையில் பணி புரிபவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்களது அடையாள அட்டையைக் காட்டினால் போதும் என்றும் இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2021, 11:35 PM IST
  • செவ்வாயன்று தமிழ்நாட்டில் 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் இ -பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • யாருக்கெல்லாம் இ-பதிவு அவசியமில்லை என தமிழக காவல் துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
மருத்துவர்கள், ஊடகத்துறையினர், வழக்கறிஞர்களுக்கு இ-பதிவு தேவையில்லை: தமிழக காவல்துறை title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் அளவில் எழுச்சியைக் கண்டு வருகிறோம்.

கொரோன (Coronavirus) பரவலைத் தடுக்க அரசு மே 10 முதல் மே 24 வரை ஊரடங்கை விதித்துள்ளது. இது தவிர மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றையும் பொது மக்கள் பின்பற்றாமல் தேவையின்றி வெளியே சாலைகளில் சுற்றிக்கொண்டிருப்பதால், கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்தலாமா என அரசு சிந்தித்து வருகிறது. 

மக்கள் தேவையில்லாமல் எங்கு செல்ல வேண்டாம் என அரசாங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் இ -பதிவு (E-Registration) செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

எனினும், இ-பதிவு (E-Pass) தொடர்பான பல குழப்பங்கள் இன்னும் உள்ளன. 

ALSO READ: E-Pass: தமிழகத்தில் இன்று முதல் இ-பதிவு அமல், விண்ணபிப்பது எப்படி

இந்த நிலையில், யாருக்கெல்லாம் இ-பதிவு அவசியமில்லை என தமிழக காவல் துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, மருத்துவத் துறையில் இருப்பவர்கள், ஊடகத் துறையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு இ-பதிவு அவசியமில்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், ஊடகத்துறையில் பணி புரிபவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்களது அடையாள அட்டையைக் காட்டினால் போதும் என்றும் இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. 

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஐ எட்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,31,596 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 364 பேர் தமிழகத்தில் (Tamil Nadu) இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,369 ஆக உயர்த்தியுள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. இன்று 21,362 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். 

இதனுடன் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ALSO READ: வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே சென்றால் ரூ.2000 அபராதம்: சென்னை மாநகராட்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News