”கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை” செல்லூர் ராஜு

வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி கொடுத்துள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 25, 2023, 03:16 PM IST
  • செல்லூர் ராஜு திமுகவிற்கு கட்டம் சரியில்லை என்று பேசியிருக்கிறார்.
  • நீட் தேர்வு குறித்தும் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
  • மதுரை மாநாடு கூட்டம் எடப்பாடிக்காக சேர்ந்த கூட்டம் என்றார் செல்லூர் ராஜு.
”கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை” செல்லூர் ராஜு  title=

அதிமுக பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
"மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான். இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும்” என்றார்

செல்லூர் ராஜு பேசுகையில், “கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவுக்கு கட்டம் சரியில்லை. எங்கே போனாலும் அவர்களுக்கு இடிக்கிறது. 
திமுக அமைச்சர்களின் தில்லு முல்லுகளை தோலுரித்து காட்டியுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி. அதற்காகவே திமுக ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இதுக்கு மேலும் தேவையா இந்த பதவி?” என்று கேட்டார். 

“நீட் தேர்வை ரத்து செய்தார்களா..?”

சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதிய மாணவர் ஜெகதீசன் போதுமான மதிப்பெண்கள் பெறாததால் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேசிய செல்லூர் ராஜு “ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்துசெய்ய முதல் கையெழுத்து போடுவோம் என்றார்கள். இப்போது என்ன செய்து விட்டார்கள்?” என்று கேட்டார். 

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

தொடர்ந்து பேசிய அவர், “உள்ளதும் போச்சுடா நொல்லை கண்ணா என்பது போல நகைக்கடன் தள்ளுபடியாகும் என நினைத்து நகைகளை அடகு வைத்த மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள்” என்றார். 

“மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது”

தமிழகத்தில் நிலவும் மது பிரச்சனை குறித்து பேசிய செல்லூர் ராஜு, “மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது. கிழவி கூட மது குடிக்கிறது. மது கிழவியை கூட கிளப்பி விட்டு விடுகிறது. கவர்னர் எந்த கோப்பையும் தன்னிச்சையாக முடிவெடுத்து அனுப்ப முடியாது. அதில் எழுத்து, அச்சு பிழைகள் இருந்திருக்கலாம். அதனால் கூட அவர் கோப்புகளை திருப்பி அனுப்பியிருக்கலாம்” என்றார். 

சமீபத்தில் நடந்த மதுரை அதிமுக மாநாடு குறித்து பேசிய அவர், “மதுரை அதிமுக மாநாட்டுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கூடாத கூட்டம் கூடியுள்ளது. வாழ்க்கையில் இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்தே இல்லை. 108 டிகிரி வெயிலிலும் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இது தானா சேர்ந்த கூட்டம். அதிமுகவுக்கு கிடைத்த இதயக்கனி எடப்பாடி பழனிச்சாமி” என்று கூறினார். 

“திமுக நாடகம் ஆடுகிறது…”

நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து பேசிய செல்லூர் ராஜு, “நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். அப்படியிருக்க அதிமுக மாநாட்டில் ஏன் தீர்மானம் போடவில்லை என கேட்க வேண்டியதில்லை. அரைத்த மாவை அரைத்து மக்களை ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல” என்று கூறினார். 

சினிமா ரெஃபரென்ஸ்..

செல்லூர் ராஜு பேசுகையில் சில சினிமா டைலாக்குகளையும் நடிகர்களின் ரெஃபரென்ஸ்களையும் கூறினார். அந்த வகையில், “ரஜினி நடக்கும் போது காலில் சரக் சரக் என தீ பரவுவது போல எடப்பாடி பழனிச்சாமி மைக்கில் பேசுகையில் கணீர் கணீர் என பேசி பின்னி எடுத்து விட்டார்" என கூறினார்.

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News