கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி திடீர் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாணவி உடல் கூராய்வு இன்று நடைபெறும் நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 19, 2022, 11:05 AM IST
  • கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம்.
  • மீண்டும் உடல் கூராய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி.
  • போராட்டம் குறித்து நீதிமன்றம் கடும் கண்டனம்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி திடீர் விசாரணை! title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி சிறிது தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் இறந்த மாணவியின் உறவினர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் இந்த போராட்டம் கலவரமாக மாறி கல்வீச்சுத் தாக்குதல்களும் ஏற்பட்டது. போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு துப்பாக்கி சூடு வரை சென்றது.   மேலும் பள்ளியின் வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | School Strike: தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: எச்சரிக்கை

இந்நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. மாணவி இறந்த அடுத்த நாள் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  எலும்பு முறிவு, ரத்தச் சிதைவு, மேலாடை, கால் சட்டை ,கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்தக்கரை போன்றவை இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மீண்டும் தனது மகளுக்கு உடல் கூராய்வு நடத்த வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.  அப்போது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து மாணவியின் பெற்றோர்களை நீதிமன்றம் கடுமையாக சாடி இருந்தது.   பின்பு உடல் கூராய்விற்கு அனுமதி அளித்தது.

இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வு நடைபெற்று வரும் நிலையில் சிபிசிஐடி போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷாராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரேத பரிசோதனைக்கு பின் வேறு எந்த பிரச்னையும் செய்யாமல் மாணவியின் உடலை அவரது தந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். வழக்கின் விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News