விராலிமலை ஒன்றியம் 15வது வார்டில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு!

விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

Last Updated : Dec 28, 2019, 11:37 AM IST
விராலிமலை ஒன்றியம் 15வது வார்டில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு! title=

விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான முதல்கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 

அடுத்தக் கட்ட தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. 56 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் ஸ்பேனர் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது அவருக்கு ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரூ சின்னம் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து சேகர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான உமா மகேஸ்வரியிடம் புகார் செய்தார்.

இந்நிலையில் இதையடுத்து விராலிமலை ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் 30- ஆம் தேதி 2-ஆம் கட்ட தேர்தலின் போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News