வாலிபர் வெட்டி கொலை; கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அதே பகுதியைச் சார்ந்த ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2022, 08:21 AM IST
  • முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை
  • அரிவாளால் வெட்டி சேதம்
  • போலீசார் அய்யாபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு
வாலிபர் வெட்டி கொலை; கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு title=

தென்காசி அருகே குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி என்பவரது மகன் சரவணன் (வயது 35). இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து அதன் மூலம் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குளத்தூரான் என்பவரது மகன் மாரிச்செல்வம் (வயது 21). இவர் கோழிப்பண்ணை நடத்திவந்தார். இவ்விருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 

மாரிச்செல்வம் சரவணனுக்கு சொந்தமான டிப்பர் லாரியின் டயர்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இது சம்பந்தமாக தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு மாரிச்செல்வம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மேலும் படிக்க | காசி விசுவநாதர் கோவில் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கிய நீதிமன்றம்

இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன் மகனை மாரிச்செல்வம் வழிமறித்து தாக்கியுளளார். மேலும் சரவணன் இன்று அய்யா புரம் சாஸ்தா கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக ஸ்கூட்டியில் மாரிச்செல்வம் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சரவணன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரிச் செல்வத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மாரிச்செல்வம் பலியானார். உடனடியாக சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தென்காசி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரிச் செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை வலைவீசி தேடி வருகிறார்கள். தற்போது போலீசார் அய்யாபுரம் பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | சிபிஎம் கட்சி பிரமுகர் கொலை வழக்கு- 5 பேருக்கு ஆயுள் தண்டனை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News