சென்னையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது,  பிரதமர் மோடி மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 

Last Updated : Feb 24, 2018, 06:29 PM IST
சென்னையில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி! title=

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது,  பிரதமர் மோடி மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை பொன்.ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எம்.பி.நவநீதகிருஷ்ணன் வரவேற்றனர்.

அதை தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி தற்போது, விழா மேடைக்கு சென்றுள்ளார்.

Trending News