ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான மாணவி - நடத்துனரால் அரங்கேறிய கொடூரம்..!

தனியார் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி, பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்ததால் ஆதங்கப்பட்ட ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Written by - Gowtham Natarajan | Last Updated : May 10, 2022, 08:53 PM IST
  • பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுநர்
  • ஒருமையில் பதிலளித்த நடத்துனர்
  • ஆதங்கத்தில் மாணவியின் விபரீத முடிவு
ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான மாணவி -  நடத்துனரால் அரங்கேறிய கொடூரம்..! title=

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமராஜா. இவரது மகள் இனியாஸ்ரீ. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் கெட்டிக்காரியான இனியாஸ்ரீ தினமும் தனியார் பேருந்தில் பயணித்து பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். அப்போது மாணவி, இறங்க வேண்டிய அரசு பள்ளி வளாகத்தின் முன்பு  பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுனர் தொடர்ந்து ஓட்டியிருக்கிறார். இதுகுறித்து மாணவி பேருந்து நடத்துநரிடம் கேட்கையில், பேருந்து நிறுத்த போதிய நேரம் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு உரிய விளக்கமளிக்க கேள்வி கேட்ட மாணவியிடம், ‘உனக்கு வேண்டுமானால் ஓடும் பேருந்திலிருந்து இறங்கிக்கோ’என்று பதிலளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

Accident,schoolgirl,bus,CCTV,viral video,பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி, ஓடும் பேருந்தில், ராசிபுரம், பள்ளி மாணவி

இதனால் ஆதங்கப்பட்ட மாணவி இனியாஸ்ரீ ஓடும் பேருந்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளார். அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மாணவியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Accident,schoolgirl,bus,CCTV,viral video,பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி, ஓடும் பேருந்தில், ராசிபுரம், பள்ளி மாணவி

மேலும் படிக்க | வயிற்றில் விழுங்கி போதை மாத்திரை கடத்தல் - கோவையில் சிக்கிய உகாண்டா பெண்..!

 

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மங்களபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பேருந்தில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சக பயணிகள் கொடுத்த தகவலின் படியும் பேருந்து ஓட்டுநர் மணி மற்றும் நடத்துனர் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தனியார் பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே, பேருந்தை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் அராஜத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், நடத்துனரால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | உறவினருடன் செல்பி எடுத்த மனைவிக்கு கத்தி குத்து - கணவர் வெறிச்செயல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News