இனி இந்த 10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது! முழு விவரம் உள்ளே

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

Last Updated : Oct 16, 2018, 11:44 AM IST
இனி இந்த 10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது! முழு விவரம் உள்ளே title=

திருட்டு விசிடி தயாரித்த 10 தியேட்டர்களின் பட்டியலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

திருட்டுத்தனமாக புதிய படங்களை படம் பிடித்த 10 தியேட்டர்களில் இனி புதுப்படம் ரிலீஸ் இல்லை என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு திரைப்படத்தை அதன் தயாரிப்பார் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த படத்தை கடும் சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறார்.

ஆனால் அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றே திருட்டு விசிடி மூலம் இணையதளங்களில் வந்துவிடுகிறது. தற்போது இது திரையரங்குகள் மூலம் தான் வெளியாகுகிறது என்று ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில் 10 திரையரங்குகள் மூலம் திருட்டுத் தனமாக படம் பிடிக்கப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திரையரங்குகளின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் திருட்டுத்தனமாக விசிடி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட தியேட்டர்கள் பெயர்கள் வருமாறு: 

கிருஷ்ணகிரி முருகன் - மனுசனா நீ

கிருஷ்ணகிரி நயன்தாரா - கோலிசோடா டூ 

மயிலாடுதுறை கோமதி - ஒரு குப்பைக் கதை 

கரூர் எல்லோரா - ஒரு குப்பைக் கதை 

ஆரணி சேத்பட் பத்மாவதி - மிஸ்டர் சந்திரமௌலி 

கரூர் கவிதாலயா - தொட்ரா 

கரூர் கவிதாலயா - ராஜா ரங்குஸ்கி 

பெங்களூரு சத்யம் - இமைக்கா நொடிகள் 

விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் - சீமராஜா 

மங்களூர் சினிபொலிஸ் – சீமராஜா.

இந்நிலையில் இனி மேற்கண்ட திரையரங்குகளுக்கு எந்த விதமான ஒத்துழைப்பும் வழங்குவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. மேலும் 17 , 18 தேதி வெளியாகும் புதிய  திரைப்படங்களின் தயாரிப்பாளர்களும் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது திரைப்படங்களை மேற்படி திரையரங்குகளில் திரையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

Trending News