நடிகை சூர்யா - ஜோதிகா மீது தென் மண்டல ஐஜியிடம் பாஜக புகார்

கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2023, 07:35 PM IST
  • கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்ற நடிகர் சூர்யா - ஜோதிகா
  • மாணவர்கள் மற்றும் பொதுமக்களை வெளியில் காக்க வைத்ததாக புகார்
  • தென் மண்டல ஐஜியிடம் புகார் அளித்த மதுரை மாவட்ட பாஜக
நடிகை சூர்யா - ஜோதிகா மீது தென் மண்டல ஐஜியிடம் பாஜக புகார் title=

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு கீழடி அருங்காட்சியகத்துக்கு குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வந்த மாணவர்களை வெளியே காக்க வைத்தது சர்ச்சையை ஏற்டுத்தியது. இது தொடர்பாக மதுரை பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8 கட்ட அகழ்வாராய்ச்சியில் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பொருட்களை தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு முதல்வர் அதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்ததார். 

மேலும் படிக்க | பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி எப்பொழுது?

காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி அருங்காட்சியகத்திற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. சுவெங்கடேசன் மற்றும் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறை நேரத்திற்கு முன்பாகவே கீழடி அருங்காட்சியகத்திற்குள் சென்றுன்னர். கண்காட்சி திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கபடவில்லை. பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கபட்டனர். 

நடிகர் சூர்யா உள்ளிட்டோர் விதி முறைகளை மீறி உள்ளே சென்றுள்ளனர் என பாஜகவினர் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும், தனது தனிப்பட்ட நலனுக்காக எம்.பி.வெங்கடேசன் பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறி நடிகர்களை அழைத்து சென்றதாகவும், இதற்கு அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலத்தில் பொது மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தின் பராமரிப்பு, மற்றும் நிர்வாகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆடு, மாடு, கோழி என.. எடப்பாடி பழனிச்சாமிக்கு குவியும் சீர்வரிசைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News