கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி கூறிய சிறுமிகள்

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 15, 2023, 05:44 PM IST
  • கும்ப நீரை சுமந்து சென்று கடலில் சமர்ப்பித்தனர்.
  • சப்த கன்னிகள் வைத்த கடல் பொங்கல்.
  • சப்த கன்னியர் வழிபாடு.
கடல் அன்னைக்கு பொங்கல் வைத்து நன்றி கூறிய சிறுமிகள் title=

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டான 2023 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர ராசியில் பயணிக்க துவங்குதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். இதையே மற்ற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில் நாடு முழுவாதும் இன்று கோலாகலமாக பொங்கல் பாண்டிக்கை கொண்டாடப் பட்டு வருகின்றது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூர் அருகே உள்ள மோர்பண்ணை கிராமத்தில் மீனவ மக்கள் அதிகமாக குடியிருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?

இவர்கள் கடல் அன்னைக்கு கிராமத்தின் சார்பில் கிராம தலைவர் தலைமையில் ஊரின் நடுவே அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ரணபத்ரகாளியம்மன் ஆலயத்தின் முன்பாக சப்த கன்னிகள் (ஊரில் உள்ள 7 பெண் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு) அந்த சப்த கன்னிகளின் மூலம் ரணபத்ரகாளியம்மன் கோவில் முன்பாக பொங்கல் வைக்கப்பட்டு அதன்பின்னர் ஊர் காவல் தெய்வமான முனியய்யா கோயிலில் ஊர்வலமாக சென்று வழிபட்டு அங்கிருந்து ரண பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமிகளுக்கு பொங்கல் படையலிட்டு, கோவிலில் வைத்திருந்த கும்பங்களை சப்தகன்னிகள் எடுத்து தலையில் சுமந்து கோவிலை சுற்றி ஊர்வலமாக கடற்கரையை வந்தடைந்தனர்.

சிறிய படகு ஒன்றை ஊர் தலைவர் சுமந்துவர அதன்பின்பு சப்தகன்னிகள் கும்ப நீரை சுமந்து கடற்கரை வந்தடைந்து கடற்கரையில் சில சாஸ்திரங்கள் செய்து அனைத்தையும் கடல் அன்னைக்கு சமர்ப்பித்து விட்டு திரும்பினர். இதுவும் ஒரு வகையில் கடல் அன்னைக்கு பொங்கலிட்டு படைப்பதாகவே கருதப்படுகிறது. இந்த நடைமுறை நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இங்கு தொடர்ந்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அவனியாபுரம்; பொறி பறக்கும் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகள் - அடக்கும் காளையர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News