கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!!

கோட்சே குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது!!

Last Updated : Jun 1, 2019, 06:26 PM IST
கமலுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!! title=

கோட்சே குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது!!

கடந்த மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் கோட்சே’ எனப் பேசினார். இது இந்து மதத்தினரை புண்படுத்துவதாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுப்பதாகவும் கூறி இந்து முன்னணி சார்பில் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து முன் ஜாமீன் கோரி கமல் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார்.

அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றக் கிளை, 20 நாட்களுக்குள் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற உத்தரவிட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினர். அதன்படி இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான கமல்ஹாசனுக்கு முன்ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 

Trending News