தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம் - காதல் திருமணம் செய்த தம்பதி கொலை !

தூத்துக்குடியில் எட்டையாபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரைப் பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 26, 2022, 11:10 AM IST
  • காதல் திருமணம் செய்த தம்பதி - கொலை
  • பெண்ணின் தந்தை வெறிச்செயல்
  • தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம்
தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம்  - காதல் திருமணம் செய்த தம்பதி கொலை ! title=

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மா, கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ரேஸ்மா, இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார இளைஞரான மாணிக்கராஜ் என்பவரை ரேஸ்மா, காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலர்கள் இருவரையும் கடுமையாக கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

murder,crime,காதலை ஏற்க மறுத்த

சொத்து பிரச்சினையில் இரு குடும்பத்தினரும் நீண்ட காலமாக பேசாமல் பகையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதற்கிடையே, இருவரும் காதல் செய்து வந்தது தீராப்பகையை தீ மூட்டிவிட்டது. சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Thoothukudi,Investigation,Lady police,Crime,Suspend,தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை துன்புறுத்திய காவலர்கள் சஸ்பெண்ட்

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது, ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஆனாலும் முத்துக்குட்டி தன்னுடைய மகள் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற முத்துக்குட்டி இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 crime,death,thoothukudi murder,thoothukudi,police

மேலும் படிக்க | பாலியல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை. பொறுப்பு பதிவாளர் கைது

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வந்தனர். இதனிடையே,கொலை செய்த முத்துக்குட்டி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க | 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை - மாமியார் தொல்லை ? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

Trending News