TN Lockdown: அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது

தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா? நீட்டிப்பதானால், என்னென்ன தகர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்து குழுவுடனும் பிற அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 25, 2021, 12:56 PM IST
  • அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.
  • தமிழகத்தில் படிப்படியாக தொற்றின் அளவு குறைந்து வருகிறது.
  • தொற்று கட்டுக்குள் இருக்கும் மாவட்டங்களில் அதிக தளர்வுகள் அளிக்கப்படலாம்.
TN Lockdown: அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது  title=

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் ஒரு நள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகின்றது. பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் ஊரடங்கால் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. 

தமிழகத்தில் (Tamil Nadu) தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, அடுத்தடுத்த ஊரடங்குகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள ஊரடங்கு 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த ஊரடங்கில் தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களும் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு, தொற்று எண்ணிக்கைக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டன. 

இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா? நீட்டிப்பதானால், என்னென்ன தகர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்து குழுவுடனும் பிற அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தமிழகத்தில் தொற்றின் அளவு மிக அதிகமாக இருந்ததால், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்குக்கான உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்குக்கான (Lockdown) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும், தொற்றின் அளவு குறையத் தொடங்கியவுடன், ஊரடங்கில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

ALSO READ: Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது

ஊரடங்கால் தொற்று பரவலில் சாதகமான விளைவுகளைக் காணமுடிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கையே திரும்பிவிட்ட நிலையும் உள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 28 ஆம் தேதி முடிவடைகின்றது.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக, ஊரடங்கில் அறிவிக்கப்படக் கூடிய தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடனும் பிற அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். 

அடுத்த கட்ட ஊரடங்கில் பின்வரும் தளர்வுகள் அளிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அதிக தளர்வுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது: 

- தற்போது தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில் பொது பேருந்து வசதி துவக்கப்பட்டுள்ளது. இது மேலும் சில மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படக்கூடும். 23 மாவட்டங்களில் 50% நகரப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படலாம். 

- திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்கும் நபர்களது எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.

- பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதிக்கப்படலாம்.

- சிறிய கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்படலாம்

- தொற்று கட்டுக்குள் இருக்கும் மாவட்டங்களில் நூலகம், அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்புள்ளது.

- நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள்  குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதிக்கப்படலாம்.

மருத்துவ மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நடத்திவரும் முக்கிய ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட ஊரடங்கின் தளர்வுகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமிழக அரசு இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ALSO READ: Medical education: அகில இந்திய தொகுப்பில் OBC ஒதுக்கீட்டில் தாமதம் வேண்டாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News