12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் துவங்கியது

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 31, 2021, 11:48 AM IST
12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் துவங்கியது title=

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் (Tamil Nadu) பிற மாநிலங்களில் கொரோனா தொற்று காரணமாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வழங்குவதற்கான செயல்முறை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களது மதிப்பெண் பட்டியல் வெளியானது. முதல்முறையாக தசம எண்களில் மதிப்பெண் அறிவிக்கப்பட்டிருந்தது.  

மாணவர்களுக்கு இந்த முறையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என அரசாங்கம் அறிவித்தது. இதற்காக கடந்த 23 ஆம் தேதி முதல் +2 துணைத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. துணைத்தேர்வுடன் தனித்தேர்வு மாணவர்களும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. 

ALSO READ: Class 12 Exams: மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு (Class 12) துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வெளியிடப்படுகிறது. காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தமிழக அரசு ஏற்பகவே அறிவித்திருந்தது. 

மாணவர்களிடம் விண்ணப்ப எண் இல்லாமல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

தற்போது துணைத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு, அவர்கள் எழுதும் துணைத்தேர்வின் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று (Coronavirus) அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு அறிவித்தது.

மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.  

ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News