இன்று இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 50வது பிறந்த நாள் தினம்.
1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி சேகர் - கஸ்துாரி தம்பதியின் மகனாக சென்னையில் பிறந்தார், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார். இசை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக, குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு ஆளானார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. சுமார் 300 கோடி செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி உடல்நிலை சரியின்றி வெளிநாட்டில் ஒய்வு எடுக்கும் போது, அவர் இல்லாத காட்சிகளை காட்சிப்படுத்தி வந்தார் இயக்குநர் ஷங்கர்.
ஏ.ஆர். ரஹ்மான் "ஸ்லம் டாக் மில்லினியர்" படத்தின் மூலமாக ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தினார். மேலும் கிராமி, கோல்டன் குளோப் உட்பட ஏராளமான விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் வென்றிருக்கிறார்.
தற்போது இசையுலகில் ரஹ்மானின் இசை சேவையைப் பாராட்டி ஜப்பான் நாட்டின் உயரிய விருதான புகுவோகா விருதை அவருக்கு வழங்குவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
விக்ரம் குமார் இயக்கத்தில் சூரியா நடித்திருக்கும் படம் ‘24’ வருகிற மே மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சூர்யா மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்த இப்படத்தின் டிரைலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் மேலும் பலர் நடிகர்கள் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.