பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
மத்திய நிதித்துறை அமைச்சகம் வங்கிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு எடுக்கும் பணத்தின் உச்சவரம்பை ரூ. 2500 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல தனி நபருக்கு ரூ. 4000 வரை பண மாற்றம் செய்யலாம் என்று இருந்ததையும் ரூ. 4500 உயர்த்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகம்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை அடுத்த மாதம் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
நாளை முதல் ஏ.டி.எம். செயல்படும். ரூபாய் 2000, நோட்டுகள் கிடைக்கும்.
ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
1. நான்கு இலக்க எண்.
ஏடிஎம் பின்னணியில் ஒரு சுவாரசியமான காரணமும் உண்டு. 1960-ல் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தான் இந்த ஏடிஎம் கண்டுபிடிப்பாளர். அப்போது ஆறு இலக்க எண் பயன்பாடில் இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கு ஆறு இலக்க எண் நினைவில் இருக்காது. அவர் தனது மனைவி கரோலின் விருப்படி நான்கு இலக்க எண் பயன்பாட்டில் கொண்டு வந்தார். ஆனாலும் இன்னும் சில நாடுகள் சில வங்கிகள் ஆறு இலக்க எண் பயன்பாடில் வைத்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.