மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஜாபர் சாதிக்கை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும், அதிமுக தலைவர்களை பாஜகவினர் பயன்படுத்துவதற்கு அதிமுக தலைவர்களுக்குத்தான் ரோஷம் வர வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக உள்ள அரசியலால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
காட்பாடியில் திமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இம்முறை வட மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றார். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மன்சூர் அலிகான் பேசி உள்ளார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக முக்கியமா, இந்த நாட்டையே பாசிஸம் செய்கிற பாஜகவை வீழ்த்துவது முக்கியமா என்று மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல நாட்டை காக்கக்கூடிய போர் என வேலூரில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
TN Government Transport Corporations: அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 17 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.