இனி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்.. மீறினால் கடும் நடவடிக்கை!

அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாகும். இதில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்..!

Last Updated : Oct 21, 2020, 12:05 PM IST
இனி 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்.. மீறினால் கடும் நடவடிக்கை! title=

அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாகும். இதில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்..!

கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து விதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் (Helmet) அணிய வேண்டும் என்ற திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. புதிய விதிப்படி, 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பைக் அல்லது ஸ்கூட்டரில் சவாரி செய்யும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

கர்நாடக போக்குவரத்துத் துறையின் புதிய விதிகளின்படி, அனைத்து மோட்டார் சைக்கிள் (motorcycle) ஓட்டுநர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயமாகும். இவர்களில் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். போக்குவரத்து விதிகளை யாராவது மீறியதாகக் கண்டறியப்பட்டால், ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் வரை இடைநிறுத்தப்படும் என்று விதிகள் தெளிவாகக் கூறுகின்றன.

விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தின் சாலைப் பாதுகாப்புக் குழு அக்., 14-ல் வீடியோ மாநாட்டை நடத்தியதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கர்நாடகா முழுவதும் புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது. 

ALSO READ | நவம்பர் 2 முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு...! 

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (Motor Vehicle Act), இரு சக்கர வாகனங்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாகும். மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019 இன் படி, ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படலாம் ஆனால் கர்நாடக அரசு அபராதத்தை ரூ.500 ஆக குறைத்துள்ளது. கர்நாடகாவில் 1.65 கோடி பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் உள்ளன. பெங்களூரில் 59.9 லட்சம் பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் 43,141 போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்து ரூ.2.14 கோடி அபராதம் விதித்ததாக பெங்களூர் போக்குவரத்து காவல்துறை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து 55,717 வழக்குகளும், ரூ .2.35 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Trending News