கலைஞரின் பேரனும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெய்ட்லியையும்,சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று பிரச்சாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி!!
உதயநிதி ஸ்டாலின் ஒரு தயாரிப்பாளராக சினிமாவுக்குள் நுழைந்தார், மேலும் விஜய், சூர்யா மற்றும் பல துறையில் முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களை செய்தார். சூர்யாவின் 'ஆதவன்' படத்தில் ஒரு கேமியோ வேடத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் 2012 இல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். அவர் கோலிவுட்டில் ஒரு நல்ல நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மற்றும் நல்ல ரசிகர்களைப் பெற்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திமுகவின் ‘உறுப்பினர்களாக’ மாறிவிட்டனர். இதை நிரூபிக்க அவர்களிடம் உறுப்பினர் அட்டைகளும் உள்ளன.
ரஜினி இன்னும் ஒரு நடிகராக இருப்பதால், அவருக்கு அரசியல் புரியவில்லை. அவர் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, நான் அவருக்கு பதிலளிப்பேன் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) வளாகத்தில் ஜனவரி 5-ல் நடந்த வன்முறையுடன் தொடர்புடைய இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை (Unity against Left) டெல்லி போலீஸ் குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.